மேலும் அறிய

FIDE World Cup 2023: ”ஆளப்போறான் தமிழன்”.. சடன் டெத் சுற்றில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா..

FIDE World Cup 2023: ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை செஸ் போட்டி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

FIDE World Cup 2023: செஸ் உலகக்கோப்பைத் தொடர் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அஜர்பைஜான் நாட்டில் உள்ள அந்த நாட்டின் தலைநகரான பாகுவில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக்கோப்பை போட்டி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள் கால் இறுதிப்போட்டிகள் என முடிவடைந்து தற்போது இந்த தொடர் அரையிறுதியை எட்டியுள்ளது. 

இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். கால் இறுதி ஆட்டத்தில் கால் இறுதியில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரக்ஞானந்தாவும்  தெலுங்கானாவைச் சேர்ந்த அர்ஜுனும் சமனில் இருந்தனர். இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடிய மூன்றாவது போட்டி நடந்தது.


இந்த போட்டி ரேபிட் செஸ் என்ற முறையில் நடந்தது. இதில் வீரர்கள் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தி விளையாட வேண்டும். ஒரு கட்டத்தில் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பிரக்ஞானந்தா முன்னிலையில் இருந்தார். மிகவும் விறுவிறுப்பாக இந்த சுற்று நடைபெற்றுக்கொண்டு இருந்தது.  அப்போது sudden death என்ற முறை கொண்டுவரப்பட்டது. இந்த sudden death சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கபடுவர் என்பது விதிமுறை. 

மிகவும் வேகமாக சரியான முடிவெடுத்து இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதால் போட்டியை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. திக் திக் என சென்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா  சிறப்பான முறையில் வெற்றி பெற்றார்.  இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரக்ஞானந்தா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கால் இறுதி போட்டி மட்டும் தொடர்ந்து ஏழு சுற்றுகள் போட்டி நடைபெற்றதால் இந்தப் போட்டியை நேரடியாக பார்த்துக்கொண்டு இருந்த பிரக்ஞானந்தாவின் தாயார் மிகவும் பதற்றமாக காணப்பட்டார்.  பிரக்ஞானந்தா ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிக்கொண்டு இருந்தபோது ஒரு கட்டத்தில் அவர் கண்ணீர் விட்டு அழுத் தொடங்கினார். இறுதியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றவுடன் அவருடைய தாயார் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல்  பிரக்ஞானந்தாவைக் கட்டிப் பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி பாராட்டினார்.

போட்டியை வென்ற பின்னர் பிரக்ஞானந்தா ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதனை அருகில் இருந்து பார்த்த பிரக்ஞானந்தாவின் தயார் பெருமிதத்துடன் காணப்பட்டார். இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரை இறுதி சுற்று வரை சென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரக்ஞானந்தாவிற்கு ட்வீட்டில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்த வெற்றி மூலம் கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். அந்த தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Embed widget