மேலும் அறிய

FIDE World Cup 2023: ”ஆளப்போறான் தமிழன்”.. சடன் டெத் சுற்றில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா..

FIDE World Cup 2023: ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை செஸ் போட்டி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

FIDE World Cup 2023: செஸ் உலகக்கோப்பைத் தொடர் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அஜர்பைஜான் நாட்டில் உள்ள அந்த நாட்டின் தலைநகரான பாகுவில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக்கோப்பை போட்டி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள் கால் இறுதிப்போட்டிகள் என முடிவடைந்து தற்போது இந்த தொடர் அரையிறுதியை எட்டியுள்ளது. 

இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். கால் இறுதி ஆட்டத்தில் கால் இறுதியில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரக்ஞானந்தாவும்  தெலுங்கானாவைச் சேர்ந்த அர்ஜுனும் சமனில் இருந்தனர். இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடிய மூன்றாவது போட்டி நடந்தது.


இந்த போட்டி ரேபிட் செஸ் என்ற முறையில் நடந்தது. இதில் வீரர்கள் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தி விளையாட வேண்டும். ஒரு கட்டத்தில் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பிரக்ஞானந்தா முன்னிலையில் இருந்தார். மிகவும் விறுவிறுப்பாக இந்த சுற்று நடைபெற்றுக்கொண்டு இருந்தது.  அப்போது sudden death என்ற முறை கொண்டுவரப்பட்டது. இந்த sudden death சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கபடுவர் என்பது விதிமுறை. 

மிகவும் வேகமாக சரியான முடிவெடுத்து இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதால் போட்டியை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. திக் திக் என சென்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா  சிறப்பான முறையில் வெற்றி பெற்றார்.  இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரக்ஞானந்தா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கால் இறுதி போட்டி மட்டும் தொடர்ந்து ஏழு சுற்றுகள் போட்டி நடைபெற்றதால் இந்தப் போட்டியை நேரடியாக பார்த்துக்கொண்டு இருந்த பிரக்ஞானந்தாவின் தாயார் மிகவும் பதற்றமாக காணப்பட்டார்.  பிரக்ஞானந்தா ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிக்கொண்டு இருந்தபோது ஒரு கட்டத்தில் அவர் கண்ணீர் விட்டு அழுத் தொடங்கினார். இறுதியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றவுடன் அவருடைய தாயார் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல்  பிரக்ஞானந்தாவைக் கட்டிப் பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி பாராட்டினார்.

போட்டியை வென்ற பின்னர் பிரக்ஞானந்தா ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதனை அருகில் இருந்து பார்த்த பிரக்ஞானந்தாவின் தயார் பெருமிதத்துடன் காணப்பட்டார். இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரை இறுதி சுற்று வரை சென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரக்ஞானந்தாவிற்கு ட்வீட்டில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்த வெற்றி மூலம் கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். அந்த தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TASMAC shops Liquor : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! குவியப்போகுது 54 புதிய வகை சரக்குகள்- மதுப்பிரியர்களுக்கு இனி ஜாலி தான்
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! குவியப்போகுது 54 புதிய வகை சரக்குகள்- மதுப்பிரியர்களுக்கு இனி ஜாலி தான்
Embed widget