மேலும் அறிய

டி20 கிரிக்கெட் போட்டி; மீண்டும் இடம்பிடித்தார் தஞ்சை பாலசுந்தர்

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பாலச்சுந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது மிகப்பெரிய தாகம். இதனால் தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலச்சுந்தர் தனது திறமையை வெளிகாட்டினார்.

தஞ்சாவூர்: மத்தியபிரதேசம் இந்தூரில் 8 மாநிலங்கள் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த வாலிபர் பாலசுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலச்சுந்தர் (27). சிவில் பி.இ. முடித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு பிறந்தது முதல் இடதுகை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி கூலித்தொழிலாளி. காலமாகி விட்டார் இவரது தாய் விஜயா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பாலச்சுந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது மிகப்பெரிய தாகம். இதனால் தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலச்சுந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிகாட்டினார். இவரது கிரிக்கெட் பயிற்சிக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செயல்பட்டனர்.


டி20 கிரிக்கெட் போட்டி; மீண்டும் இடம்பிடித்தார் தஞ்சை பாலசுந்தர்

தன் திறமைகளை வளர்த்துக்கொண்ட பாலச்சந்தர் கடந்த 2022ம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி தேர்வில் விளையாடினார். இதில் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தேர்வு பெற்றார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும் கடந்தாண்டு தமிழ்நாடு அணியில் ஏ, பி, சி என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 54 பந்துகளில் 114 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். தொடர்;து புனேவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். இதேபோல் கோயம்புத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு ஏ-பி அணிகளுக்கு இடையிலான மோதலில் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து தன் திறமையை வெளிப்படுத்தினார். 

இவ்வாறு பல போட்டிகளில் பங்கேற்று விருது மற்றும் கோப்பைகளை பாலசுந்தர் வென்றுள்ளார். ஆக்ராவில் தேசிய அளவில் நடந்த இந்தியா- நேபாள் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலசுந்தர் தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். இந்நிலையில் தற்போது மத்தியபிரதேசம் இந்தூரில் 8 மாநிலங்கள் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் தேர்வு பெற்றுள்ளார். 

இதுகுறித்து பாலசுந்தர் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் பங்கேற்பது எனது திறமையை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவிகரமாக உள்ளது. இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி மாற்றுத்திறனாளிகள் இந்திய அணிக்கு தேர்வு பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயிற்சி பெற்று வருகிறேன். எனது தாய் மற்றும் சகோதரர்கள், நண்பர்கள் எனக்கு உறுதுணையாக உள்ளனர். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். மாற்றுத்திறனாளிகளுக்காக இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Embed widget