மேலும் அறிய

"எங்களை இந்தியர் ஒருவர் மிரட்டினார்… அதன் பிறகும் நாங்கள் வந்தோம்" : ஷாஹீத் அஃப்ரிடி பரபரப்பு பேச்சு..

"ஆசியக்கோப்பைக்கு யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள்? இந்தியாதான் வேண்டாம் என்று சொல்கிறது" என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் நடக்கும்போது, ஊடகங்களுடன் பேசினார்.

ஆசிய கோப்பை தொடர் குறித்த சர்ச்சைகள் ஒருவழியாக முடிவுக்கு வருவது போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சொந்த நாட்டில் போட்டியை நடத்துவதில் உறுதியாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 'பாதுகாப்பு சிக்கல்கள்' காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பாததால் பல சிக்கல்கள் உள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் ஆசிய கிரிக்கெட் போர்டிற்கும் ஜெய் ஷா தலைவராக உள்ள நிலையில், ஆசியக்கோப்பை நடத்துவதில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இதனை எதிர்த்து பாகிஸ்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பேசி வருகிறது. முதலில் ஹோஸ்டிங் உரிமையை பெற்ற பாகிஸ்தானிற்கு இந்தியா செல்லாது என்று ஜெய் ஷா கூறிய நிலையில், பதிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியா இங்கு வரவில்லை என்றால் பாகிஸ்தான் உலகக்கோப்பைக்கு வராது, இந்தியா பாகிஸ்தான் போட்டி இல்லாமல் நடக்கும் உலகக்கோப்பை எப்படி வருமானம் ஈட்டும் என்று சவால் விடுத்தது. ஒருவழியாக மார்ச் மாதம் முடிவு தெரியும் என்று கூறிய நிலையில் இன்னும் இதற்கான விவாதம் தீர்ந்தபாடில்லை.

இந்தியாதான் வேண்டாம் என்கிறது

இதனை குறித்த உரையாடல் தொடர்கையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி ஒரு பெரிய கூற்றை வெளியிட்டுள்ளார். கடந்த காலத்தில் இந்திய சுற்றுப்பயணத்தின்போது தனது அணி ஒரு இந்தியரால் அச்சுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதன் பிறகும் அவர்கள் இங்கு விளையாட முடிவு செய்தனர் என்றும் கூறினார். "ஆசியா கோப்பைக்கு யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள்? இந்தியாதான் வேண்டாம் என்று சொல்கிறது" என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் நடக்கும்போது, ஊடகங்களுடன் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்: அதிகாலை 1 மணிவரை வீடியோ கேம்: சரியான பாடம் புகட்டிய தந்தை: கதறி அழுது மனம் மாறிய மகன் - நடந்தது என்ன?

எங்களை கூட ஒரு இந்தியர் மிரட்டினார்

மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல முடிவு செய்தால், அவர்களை பாகிஸ்தான் மிகவும் நன்றாக கவனித்துக்கொள்ளும் என்று அப்ரிடி கூறினார். "நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். நான் பெயர் கூற விரும்பவில்லை, எங்களை இந்தியாவில் அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டினார். ஆனால் நாங்கள் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டோம். அதன்பின்னும் அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணியை இந்தியாவிற்கு அனுப்பியது. எனவே மிரட்டல்கள் நம் உறவை சிதைக்கக்கூடாது" என்றார். 

இது சண்டைகளின் தலைமுறை அல்ல

இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகளின் பழைய கதைகளைப் பற்றி பேசுகையில் அவர், 2005 இல் இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். "இந்தியா வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு படியாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல, உறவுகள் நன்றாக இருக்க வேண்டும், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம். நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பும், அன்பும், பாசமும், கிடைத்தது நினைவிருக்கிறது. 2005 தொடரை நினைவுகூர்ந்தால் ஹர்பஜனும், யுவராஜும் ஷாப்பிங் மற்றும் உணவகங்களுக்குக் கூட்டிச் செல்வார்கள், அவர்களிடம் யாருமே பணம் வசூலிக்கவில்லை, இதுதான் இரு நாடுகளின் அழகு," என்று அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget