மேலும் அறிய

Ind vs Eng 3rd Odi : ஃபார்முக்காக போராடும் கோலி! அணிக்கு திரும்பும் பண்ட்? 3வது ஒரு நாள் போட்டி பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

Ind vs Eng 3rd Odi : மூன்றாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், அனைவரின் கவனமும் இந்திய அணியின் பிளேயிங்-11-ல் சில மாற்றங்கள் இருக்கலாம்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.  இப்போது மூன்றாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், அனைவரின் கவனமும் இந்திய அணியின் பிளேயிங்-11 மீது இருக்கும். ஏற்கனவே தொடரை வென்ற இந்திய அணி, இந்த போட்டியில் மாற்றங்களைச் செய்யலாம்.

3வது ஒரு நாள் போட்டி:

சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகுவதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாட்மல் இருந்த வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு அளிப்பதன் மூலம், கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் தங்கள் பலத்தை சோதித்து பார்க்க இந்த போட்டி உதவியாக இருக்கும்.

மூன்றாவது போட்டியில் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது. அவருக்குப் பதிலாக விளையாடும் கே.எல். ராகுல், பேட்டிங்கில்  ஃபார்மில் இல்லாதது இந்தியாவுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. மூன்றாவது போட்டியில், சாம்பியன்ஸ் டிராபியில் பிளேயிங்-11 இல் எந்த விக்கெட் கீப்பரைக் கருத்தில் கொள்ளலாம் என்பதைப் பார்க்க அணி நிர்வாகம் பண்டிற்கு ஒரு வாய்ப்பை வழங்க முடியும்.

முகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.இடது கை பந்து வீச்சாளர் சாம்பியன்ஸ் டிராபி அணியில் உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு சோதிக்கப்படலாம். அதேபோல், வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு அளிப்பதன் மூலம் குல்தீப் யாதவை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முடியும். வருண் சாம்பியன்ஸ் டிராபி அணியில் தற்போது வரை சேர்க்கப்படவில்லை . குல்தீப்பிற்கு அவரது இடத்தில் ஒரு வாய்ப்பு கொடுப்பதன் மூலம், அவர் சாம்பியனஸ் டிராபி தொடருக்கு  தயாராக இருக்க முடியும்.

இதையும் படிங்க: பூர்வீக கோயில் கும்பாபிஷேகம் - குடும்பத்துடன் கலந்து கொண்ட சிஎஸ்கே வீரர்

ரோஹித் ஓய்வு எடுப்பாரா?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் அற்புதமான சதம் அடித்திருந்தார். கட்டாக் மைதானம் முழுவதும் ஷாட்களை அடித்து, சாம்பியன்ஸ் டிராபிக்கு தான் தயாராக இருப்பதை தெளிவுபடுத்தினார். அணி தொடரை வென்றுவிட்டது, எனவே அவர் ஓய்வெடுத்து ஷுப்மான் கில்லை கேப்டனாக நியமிக்கலாம், முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறலாம் எனறு கூறப்படுகிறது. 

விராட் கோலியின் ஃபார்ம் இன்னும் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது, எனவே அவர் நீக்கப்பட மாட்டார். இந்தப் போட்டி கோஹ்லி தனது ஃபார்முக்கு திரும்பவும், சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு தேவையான நம்பிக்கையைப் பெறவும் ஒரு வாய்ப்பாகும். 
 
இதையும் படிங்க: CSK : தயாரகும் ஹரியானா எக்ஸ்பிரஸ்! பந்து வீச்சை பலப்படுத்தும் சிஎஸ்கே... பதிரானவுக்கு பதில் இவரா?

உத்தேச அணி: 

ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.
 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget