மேலும் அறிய

Ind vs Eng 3rd Odi : ஃபார்முக்காக போராடும் கோலி! அணிக்கு திரும்பும் பண்ட்? 3வது ஒரு நாள் போட்டி பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

Ind vs Eng 3rd Odi : மூன்றாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், அனைவரின் கவனமும் இந்திய அணியின் பிளேயிங்-11-ல் சில மாற்றங்கள் இருக்கலாம்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.  இப்போது மூன்றாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், அனைவரின் கவனமும் இந்திய அணியின் பிளேயிங்-11 மீது இருக்கும். ஏற்கனவே தொடரை வென்ற இந்திய அணி, இந்த போட்டியில் மாற்றங்களைச் செய்யலாம்.

3வது ஒரு நாள் போட்டி:

சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகுவதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாட்மல் இருந்த வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு அளிப்பதன் மூலம், கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் தங்கள் பலத்தை சோதித்து பார்க்க இந்த போட்டி உதவியாக இருக்கும்.

மூன்றாவது போட்டியில் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது. அவருக்குப் பதிலாக விளையாடும் கே.எல். ராகுல், பேட்டிங்கில்  ஃபார்மில் இல்லாதது இந்தியாவுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. மூன்றாவது போட்டியில், சாம்பியன்ஸ் டிராபியில் பிளேயிங்-11 இல் எந்த விக்கெட் கீப்பரைக் கருத்தில் கொள்ளலாம் என்பதைப் பார்க்க அணி நிர்வாகம் பண்டிற்கு ஒரு வாய்ப்பை வழங்க முடியும்.

முகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.இடது கை பந்து வீச்சாளர் சாம்பியன்ஸ் டிராபி அணியில் உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு சோதிக்கப்படலாம். அதேபோல், வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு அளிப்பதன் மூலம் குல்தீப் யாதவை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முடியும். வருண் சாம்பியன்ஸ் டிராபி அணியில் தற்போது வரை சேர்க்கப்படவில்லை . குல்தீப்பிற்கு அவரது இடத்தில் ஒரு வாய்ப்பு கொடுப்பதன் மூலம், அவர் சாம்பியனஸ் டிராபி தொடருக்கு  தயாராக இருக்க முடியும்.

இதையும் படிங்க: பூர்வீக கோயில் கும்பாபிஷேகம் - குடும்பத்துடன் கலந்து கொண்ட சிஎஸ்கே வீரர்

ரோஹித் ஓய்வு எடுப்பாரா?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் அற்புதமான சதம் அடித்திருந்தார். கட்டாக் மைதானம் முழுவதும் ஷாட்களை அடித்து, சாம்பியன்ஸ் டிராபிக்கு தான் தயாராக இருப்பதை தெளிவுபடுத்தினார். அணி தொடரை வென்றுவிட்டது, எனவே அவர் ஓய்வெடுத்து ஷுப்மான் கில்லை கேப்டனாக நியமிக்கலாம், முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறலாம் எனறு கூறப்படுகிறது. 

விராட் கோலியின் ஃபார்ம் இன்னும் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது, எனவே அவர் நீக்கப்பட மாட்டார். இந்தப் போட்டி கோஹ்லி தனது ஃபார்முக்கு திரும்பவும், சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு தேவையான நம்பிக்கையைப் பெறவும் ஒரு வாய்ப்பாகும். 
 
இதையும் படிங்க: CSK : தயாரகும் ஹரியானா எக்ஸ்பிரஸ்! பந்து வீச்சை பலப்படுத்தும் சிஎஸ்கே... பதிரானவுக்கு பதில் இவரா?

உத்தேச அணி: 

ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.
 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Embed widget