Australian Open Women: அரையிறுதிக்குள் நுழைந்த சபலென்கா, படோஸா
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில், மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிக்குள், முதல் நிலை வீராங்கனை சபலென்கா மற்றும் படோஸா ஆகியோர் நுழைந்துள்ளனர்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கியமானதாக கருதப்படும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன. அதில், இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில், சபலென்கா, படோஸா ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.
சுதாரித்து வென்ற சபலென்கா
இன்று(21.01.25) நடைபெற்ற கால் இறுதிப் போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் சபலென்கா, 27-ம் நிலையில் உள்ள ரஷ்ய வீராங்கனை பாவ்லிசென்காவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் செட்டை எளிதாக கைப்பற்றினார் சபலென்கா. ஆனால், இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ரஷ்ய விராங்கனை, அதை எளிதாக கைப்பற்றினார். இதனால் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டிய போட்டியில் 3-வது செட்டில் சுதாரித்து ஆடிய சபலென்கா, அந்த செட்டை கைப்பற்றி. இறுதியில், 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதிர்ச்சித் தோல்வியடைந்த காஃப்
இன்று நடைபெற்ற மற்றொரு கால் இறுதிப்போட்டியில், உலகின் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப், ஸ்பெயினைச் சேர்ந்த 11-ம் நிலை வீராங்கனையான படோஸாவுடன் மோதினார். விறுவிறுப்பாக சென்ற முதல் செட்டை, 7 க்கு 5 என்ற புள்ளிகளில் படோஸா கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, அடுத்த செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய படோஸா, 6 க்கு 4 என்ற புள்ளி கணக்கில் வென்றார். இதையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில் கோகோ காஃப் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், படோஸா அரையிறுதிக்குள் நுழைந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

