மேலும் அறிய

Asian Champions Trophy 2023 Semi-Final: வந்துட்டேன்னு சொல்லு..! ஜப்பானை ஊதித்தள்ளி 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா..!

Asian Champions Trophy 2023 Semi-Final: ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவதுப் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் பலப்பரீட்சை நடத்தியது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின. 

போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா  அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு  செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன. 

இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி 5வது இடத்துக்கான போட்டி பாகிஸ்தான் மற்றும் சீனா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதையடுத்து நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் மலேசியா மற்றும் சௌத் கொரியா அணிகள் மோதின. அதில் மலேசிய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 


Asian Champions Trophy 2023 Semi-Final: வந்துட்டேன்னு சொல்லு..! ஜப்பானை ஊதித்தள்ளி 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா..!

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியின் முதல் சுற்றில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இந்திய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் வீணடித்தது. இந்த போட்டி இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் 300வது சர்வதேச போட்டி என்பதால் போட்டிக்கு முன்னதாக அவர் கௌரவபடுத்தப்பட்டார். 


Asian Champions Trophy 2023 Semi-Final: வந்துட்டேன்னு சொல்லு..! ஜப்பானை ஊதித்தள்ளி 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா..!

விறுவிறுப்பான இரண்டாவது சுற்று

இரண்டாவது சுற்றில் 19வது நிமிடத்தில் இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது. அதன் பின்னர் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக மாற்ற, இந்திய அணி 2 கோல்களை அடித்து போட்டியில் முன்னிலை வகித்தது. இதையடுத்து இந்த சுற்றில் இந்திய அணி நேரத்தை விரையமாக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய அணியின் மந்தீப் சிங் கோல் அடிக்க, இந்திய அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. 


Asian Champions Trophy 2023 Semi-Final: வந்துட்டேன்னு சொல்லு..! ஜப்பானை ஊதித்தள்ளி 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா..!

மூன்றாவது சுற்றில் இந்திய அணி துவக்கத்தில் நேரத்தை போக்கிக்கொண்டு இருந்தது. இதனால் ஜப்பான் அணி என்ன செய்வது என தெரியாமல் இருந்தது. இதற்கிடையில் சுமித் இந்திய அணியின் 4வது கோலை அடிக்க, போட்டியில் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. 

இறுதிச் சுற்றில் இந்திய அணி மிகவும் ஜாலியான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கையில், இந்திய அணி வேக மெடுத்தது. இதனால் இறுதிச் சுற்றில் தமிழ்நாடு வீரர் கார்த்தி இந்திய அணிக்கான 5வது கோலை அடித்தார். இறுதியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. ஜப்பான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளது. ஜப்பான் அணி மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சௌத் கொரியாவை எதிர்கொள்ளவுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget