மேலும் அறிய

Ariyalur Youth Murder: அரியலூர் இளைஞரின் கொலைக்கு கோலி காரணம் இல்லை... நடந்தது இதுதான்! - எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்

ரோகித் ரசிகரை விராட் ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் திக்குவாயை கிண்டல் செய்தது தான் கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரோகித் ரசிகரை விராட் ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் சரளமாக பேசுவதில் சிக்கல் உள்ளதை (திக்குவாய்) கிண்டல் செய்தது தான் கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விராட்கோலி மற்றும் ரோகித்சர்மா இருவரும் இந்திய அணியின் தற்போதைய சிறந்த கிரிக்கெட் வீரர்கள். மேலும் இந்த கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் இருவரில் யார் சிறந்தவர் என்பதைப் பற்றி சமூக ஊடகங்களில் நாளுக்குநாள் விவாதித்து வருவது வாடிக்கைதான்.  

கடந்த காலத்தில், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் பிரையன் லாரா இடையேயும், இந்திய அணியில் சச்சினுக்கும் தற்போதைய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே இதே விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதுபோன்ற விவாதங்களில் ரசிகர் ஒருவர் கொல்லப்பட்டதை இதுவரை யாரும் கேள்வி பட்டது இல்லை. 

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என காலத்திற்கேற்ப அவரவர் ரசிகர்கள் அடித்து கொள்கின்றனர். இந்த சண்டையில் பல ரசிகர்களும் உயிரிழந்துள்ளது நம் அனைவரும் அறிந்ததே. 

இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்காக வாதமிடுவது இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில்,  அரியலூரில் ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியெல்லாம் ஒரு அணியா? என்று சொன்ன ரோகித் சர்மா ரசிகரை விராட் கோலி ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக தகவல் வெளியானது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த அக்டோபர் 11 ம் தேதி இரவு கோலியின் ரசிகரான தர்மராஜூம், ரோகித் ரசிகரான விக்னேஷும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவரும் அவர்களுக்கு பிடித்த வீரர்களைப் பற்றி, பெருமையாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ரோகித் சர்மா ரசிகரான விக்னேஷ், தர்மராஜை பாடி ஷேமிங் செய்ததாக தெரிகிறது. இதனால்  ஆத்திரத்தில் தர்மராஜ் விக்னேஷை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

சிட்கோ தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் காலையில் விக்னேஷின் உடலைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விக்னேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இதையடுத்து, தப்பியோடிய கோலியின் ரசிகரான தர்மராஜை கைது செய்ய வேண்டும் என்றும், ரோகித் சர்மா ரசிகர்கள் இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் வகையிலும் ட்விட்டர்வாசிகள் ட்விட்டரில் #Arrestkohli என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தர்மராஜ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கொலைக்கான உண்மையான காரணத்தினை கண்டறிய காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் தர்மராஜ் சரளமாக பேசுவதில் சிக்கல் (திக்குவாய்) உடையவர் என்றும், அதனை விக்னேஷ் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததால் ஆத்திரமடைந்த தர்மராஜ் விக்னேஷை கிரிகெட் பேட்டால் அடித்து கொலை செய்துள்ளார் எனவும் அரியலூர் எஸ்.பி பேரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Embed widget