மேலும் அறிய

Thiruppavai Paadal 2:“அக அழகுதான் சிறந்தது” மார்கழி விரதத்தை இப்படி கடைபிடிக்க வேண்டும்..கூறும் ஆண்டாள்

Thiruppavai pasuram 2: மார்கழி மாதம் 2ம் நாள்: “ வாழ்க்கைக்கு தேவையான நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என திருப்பாவையின் 2வது பாடல் மூலம் ஆண்டாள் உணர்த்துவதாக அமைகிறது என்றே சொல்லலாம்.

திருப்பாவையின் முதல் பாடல் மூலம், மார்கழி மாதத்தின் சிறப்பு குறித்தும், கண்ணனை தொழுது நோன்பு இருந்தால் ஏற்படும் நன்மை குறித்தும் சூடி கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் எடுத்துரைத்தார். இன்று மார்கழி மாதத்தின் இரண்டாவது நாளில், ஆண்டாள் சொல்லியிருக்க கூடியவை என்னவென்று பார்க்கலாம். 

நோன்பு ( விரதம் ) என்றாலே அதற்கென வழிமுறைகள் இருக்கும். அதுபோலவே மார்கழி மாத விரதத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 2வது பாடல் மூலம் ஆண்டாள் எடுத்துரைக்கிறார்.

இரண்டாவது பாடல் தெரிவிப்பது:

”இந்த உலகில் வாழ்பவர்களே, மார்கழி மாதத்தில் நாம் செய்ய கூடிய முக்கியமான காரியம் என்னவென்றால், கண்ணனை வேண்டி நோன்பு இருக்க வேண்டும், மேலும், நோன்புக்கு தேவையானவற்றை நான் சொல்கிறேன்” என ஆண்டாள் கூறுகிறார்.

இரண்டாவது பாடல் மூலம்,  தோழிகளே, நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். அதாவது, விரத நாட்களில் அதிகாலையிலே நீராட வேண்டும். கண்களுக்கு மை இட்டு கொள்ளுதல் கூடாது, தலையில் மலர் சூடி கொள்ளுதல் கூடாது.

ஏனென்றால், புற தோற்ற அழகு ஒரு நாள் போக கூடியது. ஆனால் அக தோற்ற அழகு அழிவில்லாதது. ஆகையால், அகத் தோற்ற அழகே நமக்கு முதன்மையானது. ஆகையால், அதற்கு நாம் முதன்மையான முக்கியத்துவம் கொடுப்போம் என குறிப்பால் உணர்த்துகிறார்.

அடுத்ததாக, விரத நாட்களில் நெய் உண்ண வேண்டாம், பால் உண்ண வேண்டாம் என்று உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எதையெல்லாம் செய்ய கூடாதோ, அதை செய்ய கூடாது, தீயை வார்த்தைகளை பேச கூடாது, மற்றவர்கள் குறித்து தவறுதலாக பேச கூடாது என எடுத்துரைக்கிறார்.

மேலும், இல்லாதவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும் எனவும், அது நேரடியாக இறைவனுக்கே செய்ததாக கருதப்படும் எனவும் உணர்த்துகிறார்.

இதன் மூலம், மன கட்டுப்பாடும் உணவு கட்டுப்பாடும், அதனுடன் தர்மமும் சேரும் போது, விரதம் முழுமை அடையும் என இரண்டாவது பாடலில், அதாவது மார்கழி இரண்டாவது நாளில் விரத வழிமுறைகளை கூறுவதன் வழியாக மறைமுகமாக வாழ்க்கைக்கு தேவையான வெற்றிக்கு கடைபிடிக்க தேவையான நெறிகளை ஆண்டாள் எடுத்துரைக்கிறார்.

Also Read: Thiruppavai Paadal 1:"கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!

பாடல் :

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்

  செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி,

   நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,

மையிட் டெழுதோம், மலரிட்டு நாம்முடியோம்

  செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,

  உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். 

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Embed widget