மேலும் அறிய

Thiruppavai Paadal 1:"கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!

Thiruppavai pasuram 1: மார்கழி மாதம் முதல் நாள்: “ மாதங்களில், நான் மார்கழி என்று கண்ணன் கூறுகிறார். இதனால், இறை நம்பிக்கை உள்ளவர்களால், மார்கழி மாதமானது, மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது”.

Margali 2024: சூடி கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள், மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி திருப்பாவை இயற்றியுள்ளார். திருப்பாவை பாடலானது, இறைவனை நினைத்து நோன்பு இருந்தால் , பல நன்மைகள் விளையும் என, அதிகாலையில் தோழிகளை எழுப்பி , நீராடச் செல்வது போல, பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கண்ணன் மீது நெருங்கிய அன்பு கொண்டு, தம்மால் முயன்ற உதவியை பிறருக்கு செய்து, திருமாலை வணங்குவதே திருப்பாவையின் உட்பொருளாகவும் கருதப்படுகிறது.

இலக்கிய வரலாறு:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள், பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். 

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.

மார்கழி மாதம் முதல் நாள் இன்று முதல் கடைசி நாளான 30 ஆம் நாள் வரை 30 பாடல்களை கொண்டதாக திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.

முதல் பாடல் விளக்கம்:

மார்கழி மாதம், முழு நிலவான பவுர்ணமி தோன்றுகிறது. மேலும் மாதங்களில் மார்கழியும், மாதத்தில் பௌர்ணமியும் தனி சிறப்பு வாய்ந்ததாகும் என மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள் கூறுகிறார். ஆகையால், இந்த நல்ல நாள் காலை பொழுதை, தான் மட்டும் அனுபவிக்காமல் மற்றவர்களும் அனுபவித்து இன்பம் காண வேண்டும் என்று  மற்ற பெண்களையும் அழைக்க செல்கிறார்.

அப்போது, செல்லும் போது ஆயர்பாடியைச் ( மாடுகளை வைத்து தொழில் செய்வோர் ) சேர்ந்த காவல் தொழில் செய்யும் நந்தகோபனுக்கும் அழகிய கண்கள் உடைய யசோதைக்கும் மகனாகிய கண்ணபிரானை பாட போகிறோம் என்று கூறுகிறார். அதாவது கண்ணனை பார்த்து-பார்த்து யசோதையின் கண்கள் அழகாகிவிட்டதாக, பாவித்து ஆண்டாள் பாடுகிறார். இதிலிருந்து, நல்ல பொருட்களை பார்க்க பார்க்க நல்ல எண்கள் உருவாகும் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார்.

சிவப்பான கண்களும், கருமையான உடலும் கொண்ட கண்ணனின் ஒரு கண்ணில் சூரியனும், மறு கண்ணில் நிலவும் கொண்ட பெருமை மிகுந்த கண்ணனை பாட போகிறோம்; ஆகையால், பெண்களே எழுந்து வாருங்கள், இக்காலை பொழுதில் நீராட செல்வோம் என்கிறார். அவ்வாறு செல்லும் போது, ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தாலும், தன்னை ஆயர்பாடி குலத்தை சேர்ந்தவராக அடையாளப்படுத்துகிறார். 

இவ்வாறாக முதல் பாடல் தொடங்குகிறது.

பாடல்:

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
     நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்,
    பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget