மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வுகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

கந்தசஷ்டி பெருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இவ்விழாவின் 6 -ஆம் திருநாளன்று முருகபெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததாக ஐதீகம். இந்த ஐதீகத் திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலும், முருகன் ஆலயங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வுகள்!

சூரசம்ஹாரம் நிகழ்வை முன்னிட்டு, முருகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  எழுந்தருளினார். தொடர்ந்து யானை, சிங்கம், அசுரன் ஆகிய மூன்று முகங்களைக் கொண்ட சூரனை ஒவ்வொன்றாக தன் சக்திவேலைக் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். மேலும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா என பக்தி கோஷத்தோடு தரிசனம் செய்தனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வுகள்!

தொடர்ந்து, மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளையில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனகர்த்தர் பின்னர் மாயூரநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதேபோல் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


கந்தசஷ்டி விழாவையொட்டி பொறையார் குமரன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் புகழ்பெற்ற குமரன் கோயில் உள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 25 -ஆம் தேதி கந்த சஷ்டி விழா சொற்பொழிவுடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி முருக பெருமான் கோயில்  வீதியில் எழுந்தருளினார். அங்கு சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

GUJARAT: தகுதி சான்றிதழ் பெறாமல் திறக்கப்பட்டதா குஜராத் கேபிள் பாலம்? - அதிகாரிகள் சொன்ன திடுக்கிடும் தகவல்


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வுகள்!

முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமகாவும், தன முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை முருக பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி தன்னுடன் ஆட் கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட் கொண்டார். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் முருக பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து  முருக பெருமான், வள்ளி - தெய்வானை திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற உள்ளது.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!
TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!
TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!
Honda ADV 160: லாங் ரைட் போகணுமா..! பைக்கிற்கு நோ, யமஹா, TVS-க்கு போட்டியாக ஹோண்டா ஸ்கூட்டர் - முழு விவரம்
லாங் ரைட் போகணுமா..! பைக்கிற்கு நோ, யமஹா, TVS-க்கு போட்டியாக ஹோண்டா ஸ்கூட்டர் - முழு விவரம்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
Embed widget