மேலும் அறிய

Soorasamharam Fasting: கந்தனுக்கு அரோகரா.. பக்தர்களே சூரசம்ஹாரத்தில் விரதம் இருப்பது எப்படி?

சூரசம்ஹாரம் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், முருகப்பெருமானுக்கு எப்படி விரதம் இருப்பதை கீழே காணலாம்.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்கள் பல உள்ளது. அவற்றில் மிக மிக முக்கியமானது சூரசம்ஹாரம் திருநிகழ்வு. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை கொண்டாடும் இந்த திருநாளே சூரசம்ஹாரம் ஆகும். 

சூரசம்ஹாரம்:

ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு பிறகு அமாவாசைக்கு மறுநாள் வரும பிரதமை திதி தொடங்கி, சஷ்டி திதி வரை சூரசம்ஹாரம் 6 நாட்கள் நடக்கும். 7வது நாள் திருக்கல்யாண வைபவத்துடன் சூரசம்ஹாரம் நிறைவு பெறும். நடப்பாண்டில் சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதி நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நாளை மறுநாள் சூரசம்ஹாரம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 


Soorasamharam Fasting: கந்தனுக்கு அரோகரா.. பக்தர்களே சூரசம்ஹாரத்தில் விரதம் இருப்பது எப்படி?

சூரசம்ஹாரம் திருவிழா என்றாலே பக்தர்கள் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது முதலே விரதம் இருப்பது வழக்கம். பெரும்பாலான பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்குவது வழக்கம். உடல்நலக்குறைவு. வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் சில பக்தர்களால் விரதம் இருக்க இயலாது. அவ்வாறு விரதம் இருக்க இயலாதவர்கள் சூரசம்ஹார நன்னாளில் மட்டும் விரதம் இருப்பார்கள். 

அவ்வாறு சூரசம்ஹாரம் நன்னாளில் விரதம் இருப்பவரகள் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம். 

1. முதல் நாளை வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள முருகர் உள்ளிட்ட சாமி படங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

2. சூரசம்ஹார நாளான 27ம் தேதி காலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும். 

3. பின்னர், வீட்டில் உள்ள முருகப்பெருமான் படத்திற்கு முன்பு விளக்கேற்ற வேண்டும். 

4. விளக்கை ஏற்றி முருகப்பெருமானிடம் என்ன காரணத்திற்காக விரதம் இருக்கிறீர்களோ அதை முருகப்பெருமானிடம் கூறி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். 

5. உங்கள் வேண்டுதலை மனதில் நினைத்துக்கொண்டு ஓம் முருகா என்று மனதார வேண்டி, உங்கள் வேண்டுதல் நிறைவேற்றித் தர வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

6. முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி, முல்லை, செம்பருத்தி ஆகிய மலர்களில் ஏதாவது ஒரு மலர் சூட்ட வேண்டும். 

7. முருகப்பெருமானுக்கு பால், பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். 

8. முருகப்பெருமானைப் போற்றும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என ஏதாவது ஒன்றை பாராயணம் செய்வது நல்லது ஆகும்.  இவற்றை பாராயணம் செய்ய முடியாதவர்கள் ஓம் சரவண பவ மந்திரத்தை சொல்லலாம்.

9. மாலையில் சூரசம்ஹாரம் நடக்கும் என்பதால் பக்தர்கள் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம்.

10. சூரசம்ஹாரம் நடப்பதை கோயிலுக்குச் சென்று ரசிக்க முடியாத பக்தர்கள் தொலைக்காட்சியில் கண்டு களிக்கலாம். 

விரதம் இருந்த பிறகு சூரசம்ஹாரம் நிறைவிற்கு பிறகு குளித்துவிட்டு, முருகனுக்கு படைத்த பால் மற்றும் நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget