மேலும் அறிய

Sivagangai: 2 லட்சம் தேங்காய்கள் உடைப்பு.... 2 மணி நேரம் ஒலித்த சத்தம் - சிங்கம்புணரியில் பக்தர்கள் விநோத வழிபாடு

தேங்காய்கள் உடைக்கும் சப்தம் சுமார் இரண்டு மணிநேரம் தேரடி படிகளில் எதிரொலித்தது.

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக பிரமோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு பிரமாண்ட திருத்தேரோட்டம் நடைபெற்றது.

விநோத வழிபாடுகள்

தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் விநோத வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் கறி விருந்து, பட்டைசோறு சாப்பிடுதல், வெள்ளை சேலை கட்டி பொங்கல் வைத்தல், செவ்வாய் பொங்கல், முள் படுக்கையில் அருள்வாக்கு சொல்லுதல் உள்ளிட்ட பலவகையான விநோத வழிபாட்டு முறைகள் உள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிரபலமான சேவுகப் பெருமாள் கோயிலில் தேர் திருவிழாவின் போது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும். இந்த தேங்காய்களை உடைத்துக் கொண்டிருக்கும் போது பக்தர்கள் சிலர் ஹெல்மெட் அணிந்து கொண்டு தேங்காய்களை சேகரித்து செல்வார்கள். இந்தாண்டு இந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட கோயிலாகும் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசி விசாக பிரமோற்சவ பெருந் திருவிழா கடந்த மே 12- ஆம் தேதி காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் பெருந்திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி இரவு சுவாமி திருவீதி உலாவும் ஐந்தாம் நாள் திருக்கல்யாண வைபவமும் ஆறாம் நாள் இரவில் கழுவன் திருவிழாவும் நடைபெற்றது.

தேர் திருவிழா

அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாளான நேற்று மாலை ஸ்ரீ விநாயகரும் சிங்கம்பிடாரி அம்மனும் தனித்தனியா இரண்டு சப்பரத்திலும் பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ சேவுகப் பெருமாள் அய்யனார் பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சந்திவீரன் கூடம் பகுதியில் இருந்து புறப்பட்ட நாட்டார்கள் மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டு தேரடியில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தேவஸ்தான கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் நாட்டார்கள் வடம் பிடித்து தேரை இழுக்கத் துவங்கினர். தொடர்ந்து தேரோட்டத்தை காண புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் சிங்கம்புணரி அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் என இலட்சக்கணக்கானோர் தேரோட்டத்தை காணக் கூடினர். புறப்பட்ட தேர்கள் நான்கு ரதவீதிகளிலும் வந்து நிலையை  வந்து சேர்ந்தது.

தேங்காய் உடைப்பு

காத்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் காணிக்கைகளை தேங்காய்களாக தேரடி நிலை படிகளில் எறிந்து உடைக்கத் துவங்கினர். இந்த பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் தங்களது நேர்த்திகடனாக  101 ,201 , 501 , என பக்தர்கள்  சுமார் 2 இலட்சம் தேங்காய்களை உடைத்து வழிபாடு செய்தனர். தேங்காய்கள் உடைக்கும் சப்தம் சுமார் இரண்டு மணிநேரம் தேரடி படிகளில் எதிரொலித்தது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தமிழகத்தில் அதிகரிக்கும் மழை: ஆர்.பி உதயகுமார் வைக்கும் முக்கிய கோரிக்கை!

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்.. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget