மேலும் அறிய

தமிழகத்தில் அதிகரிக்கும் மழை: ஆர்.பி உதயகுமார் வைக்கும் முக்கிய கோரிக்கை!

மழைக்காலங்களில் சாலைகளில் மழை நீர் தேங்காமலும், தேங்கிய மழை நீரை அகற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

கோடை வெயிலுக்கு பின் மழை
 
கடந்த இரண்டு மாதங்களாக கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டது.  மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வந்தது. மதுரை மாவட்டத்திலும் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. மதுரையில் பல மாதங்களாக போதிய மழை பெய்யாமல் இருந்ததால், பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் தற்போது கோடையில் கடுமையான வெயிலுக்கு பின் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் சாலைகளில் மழை நீர் தேங்காமலும், தேங்கிய மழை நீரை அகற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
 
மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
 
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது..,” மதுரை மாவட்டம் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. கடைசி இரண்டு வாரம் கத்திரி வெயில் பொதுமக்கள் பகல் நேரத்திலும், வெளியே நடமாட முடியாத நிலையும், இரவில் கடும் புழுக்கமும், பகலில் வெயிலில் கொடுமையாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெயில் பாதிப்பால் பொதுமக்களுக்கு ஹிட் ஸ்டோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன இதனால் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. 
 
மதுரை கனமழை
 
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது, நேற்று பிற்பகல் இடி மின்னலுடன் நகர் முழுவதும் பலத்த மழை பெய்தது, இதனால் பல இடங்களில் சாலைகளை தெரியாத அளவிற்கு மழை நீர் சூழ்ந்தது, பள்ளமாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது ,பல இடங்களில் பல அடி தூரத்திற்கு தண்ணீர் தேங்கியதால அதில் சென்ற இரண்டு சக்கர வாகனங்கள் பழுதடைந்தன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால், மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மீனாட்சி அம்மன் கோவில், மாசி வீதிகளும், வெளிவீதிகளும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர், ஒவ்வொரு மழையின் போதும் சாலைகளில் மழைநீர் தேங்குவதும், மக்கள் சிரமப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.
 
போக்குவரத்து முடங்கி நெரிசல்
 
 
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற சாலைகளை கணக்கெடுத்து, மழைநீர் சுலபமாக வழிந்தோட தீர்வு காண வேண்டும். ஆனால் உரிய நடவடிக்கை இல்லாததால், சில மணி நேரம் மழைக்கே மதுரை நகர் தாக்குப் பிடிக்காத முடியாமல், போக்குவரத்து முடங்கி நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தியது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் சாலைகளில் தேங்காமல் இருக்கவும் ,தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்றிடவும், தடையில்லாத, சிரமமில்லாத, பாதுகாப்பான போக்குவரத்திற்கும் தேவையான நடவடிக்கு எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கடிதத்தில் கூறியுள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget