மேலும் அறிய

சேலம் மயான கொள்ளை: பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்

நோய் நீங்கவும், குழந்தை பாக்கியம், மற்றும் பிணி நீங்க வேண்டி சுடுகாட்டில் படுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.

மயான கொள்ளை என்பது அகிலத்தை காக்கும் அம்மன் கடும்கோபம் அடைந்து உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த சிவன் ருத்ர நடனமாடி அம்மனை சங்கலியால் கட்டிப்போட்டார். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் அம்மாவசை தினத்தில் அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அம்மாவசை தினத்தில் மயான கொள்ளை விழா நாடு முழுவதும் வெகு விமர்சியாகவும், கோலாகலமாகவும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் சேலத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மயான கொள்ளை நிகழச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹா சிவராத்தி தினந்தில் அங்கால அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

சேலம் மயான கொள்ளை: பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்

 இதனை தொடர்ந்து மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு அம்மனுக்கு பல்வேறு விதமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரும் போது விரதம் இருக்கும் பக்தர்கள்  அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களை போல பக்தர்கள் காளி வேடமணிந்து வண்ணங்களை முகத்தில் பூசி மயில் தோகையை கட்டி, நடனமாடியபடி, சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திகடன் செலுத்துவர். அப்போது பக்தர்கள் உயிருடன் உள்ள கோழி, ஆடுகளை வாயில் கடித்துக்கொண்டு ஓடிவருவார்கள் ரத்தம் சிந்த வரும்போது சுடுகாட்டின் வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்கள் அம்மன் வரும்போது வழிகள் தோறும் படுத்து கொள்ளவார்கள். இந்த நிலையில் பக்தர்களை அம்மன் தாண்டி சென்றால் நோய், பில்லி, பிணி, என சகலமும் நீங்கும் எனபது ஐதீகம். பக்தர்களை தாண்டி சென்ற அம்மன் வேடமணிந்த பக்தர்கள் சுடுகாட்டில் சூறை ஆடி விரதத்தை முடிப்பார்கள்.‌ இந்த நிகழ்ச்சியை காண சேலம் மற்றும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு மகிழ்வார்கள். சேலம் மாநகர மணக்காடு, கிச்சிபாளையம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, ஜான்சன் பேட்டை, அஸ்தம்பட்டி, நான்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பக்தர்கள் வேடமிட்டு ஜான்சன் பேட்டை மயானத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

சேலம் மயான கொள்ளை: பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்

இது குறித்து பக்தர்கள கூறும்போது, பல ஆண்டுகாலமாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளதாகவும், அம்மன் வரும்போது படுத்துக்கொண்டால் தீராத நோய் நீங்கும், என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர்கள்  கூறும்போது இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் குடும்பம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் மேலும் பில்லி, பிணி பிடித்தவர்கள் இங்கே கலந்து கொண்டால் நீங்கி விடும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget