மேலும் அறிய

பட்டினத்தார் குருபூஜை: வாழ்க்கையின் உண்மை உணர்த்திய சிவபெருமான்! திருவெண்காட்டில் நடைபெற்ற ஐதீக நிகழ்வு..!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பட்டினத்தார் திருவிழாவின் ஐதீக நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பல்லவனத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சவுந்தரநாயகி சமேத பல்லவனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்தில் தீவிர சிவபக்தரும், புலவருமான பட்டினத்தார் அவதரித்த ஸ்தலமானதால் இங்கு பட்டினத்தாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. 

10 நாள் குருபூஜை விழா 

இங்கு பட்டினத்தார் வரலாறு ஐதீக விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 10 நாள் குருபூஜை விழாவாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குருபூஜை விழா கடந்த ஜுலை 29 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 9 -ம் தேதி வரை நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெற்று வரும் இவ்விழாவை முன்னிட்டு திருவெண்காட்டில் ஞான கலாம்பிகையுடன் எழுந்தருளிய பட்டினத்தார். மணிகர்ணிகை ஆற்றில் நீராடி, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிவதீசை பெரும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மூன்றாம் திருநாள் நிகழ்வாக பட்டினத்தார் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய முக்குலத்தில் நீராடும் நிகழ்வு நடந்தது.


பட்டினத்தார் குருபூஜை: வாழ்க்கையின் உண்மை உணர்த்திய சிவபெருமான்! திருவெண்காட்டில் நடைபெற்ற ஐதீக நிகழ்வு..!

அப்போது பட்டினத்தாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி சன்னதியில் பட்டினத்தார் மரகத மற்றும் ஸ்படிக லிங்கத்திற்கு சிவ பூஜை செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. பூஜையை கோயில் சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில் பட்டினத்தாரை குலதெய்வமாக வணங்கும் காரைக்குடி நகரத்தார் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பட்டினத்தார் வரலாறு 

முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார்.


பட்டினத்தார் குருபூஜை: வாழ்க்கையின் உண்மை உணர்த்திய சிவபெருமான்! திருவெண்காட்டில் நடைபெற்ற ஐதீக நிகழ்வு..!

ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார். ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது.


பட்டினத்தார் குருபூஜை: வாழ்க்கையின் உண்மை உணர்த்திய சிவபெருமான்! திருவெண்காட்டில் நடைபெற்ற ஐதீக நிகழ்வு..!

மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில், “”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. “”மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,” என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்’ என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் வியப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்!
திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் வியப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்!
கோவிந்தா நாமத்தின் ரகசியம்: ஒலிக்கும் முழக்கத்தின் பின்னணியில் உள்ள ஆன்மீகக் கதை!
கோவிந்தா நாமத்தின் ரகசியம்: ஒலிக்கும் முழக்கத்தின் பின்னணியில் உள்ள ஆன்மீகக் கதை!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் விமரிசையான வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் விமரிசையான வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Upcoming Smartphones in July: ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
M.R. Vijayabhaskar Political Journey : செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
Embed widget