மேலும் அறிய

தகிக்கும் தீக்குழியில் மலர் பாதம் பதித்த பக்தர்கள்: ஆக்கூர் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தி பரவசம்..!

வெகுவிமர்சையாக நடைபெற்ற ஆக்கூர் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் 16 அடி நீள அலகு குத்தியும், காவடி எடுத்தும், தீக்குழியில் இறங்கியும் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவை அடுத்த ஆக்கூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், 16 அடி நீள அலகு குத்தியும், தீக்குழியில் இறங்கியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

வரம் அருளும் ஆக்கூர் மாரியம்மன்

ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் போற்றப்படுகிறார். திருமணத் தடையால் அவதிப்படுபவர்களுக்கு நல்வாழ்வு அமைத்துத் தருபவளாகவும், மழலைச் செல்வம் வேண்டி வருவோருக்குக் குழந்தை வரம் நல்குபவளாகவும் அன்னை விளங்குகிறாள். இதனால், இப்பகுதி மக்கள் அம்மனைத் தங்கள் குலதெய்வமாகவே பாவித்து, ஆண்டுதோறும் இவ்விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா

நடப்பு ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ஆம் தேதி மங்கள இசை மற்றும் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீராவேசத்துடன் நடைபெற்ற காவடி ஊர்வலம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழாவையொட்டி, ஆக்கூர் இரட்டைக் குளக்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றது. கரகத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், பால்காவடி, பறவைக்காவடி, அலகு காவடி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கை முழங்க ஊர்வலமாக வந்தனர். குறிப்பாக, ஒரு பக்தர் தனது வாயில் 16 அடி நீள அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்த காட்சி பக்தர்களிடையே பெரும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது. ஆக்கூர் கடைவீதி வழியாகச் சென்ற இந்த ஊர்வலம், கோவிலை வந்தடைந்தது.

தகிக்கும் தீக்குழியில் மலர் பாதம் பதித்த பக்தர்கள்

கோயில் முன்பாக பிரம்மாண்டமான முறையில் தீக்குழி (அக்னி குண்டம்) வளர்க்கப்பட்டிருந்தது. பூசாரி வேத மந்திரங்கள் ஓத, முதலில் சக்தி கரகம் தீக்குழியில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து, மஞ்சள் ஆடை உடுத்தி காப்புக் கட்டி விரதமிருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் "ஓம் சக்தி, பராசக்தி" என்ற கோஷங்களுடன் வரிசையில் நின்றனர்.

தகிக்கும் கனல் என்று கூடப் பாராமல், தரையில் நடந்து செல்வது போன்ற மிக இயல்பான நிலையில் பக்தர்கள் தீக்குழியில் இறங்கித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பல பக்தர்கள் கைகளில் குழந்தைகளை ஏந்தியபடியும் தீமிதித்தது பக்திப் பெருக்கை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செம்பனார்கோவில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவசரத் தேவைகளுக்காகத் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கோயில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்திருந்தனர்.

இதில் ஆக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். "அன்னையின் அருளால் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா இவ்வாண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்தது," என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.விழா ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

12 நாட்களும் 12 அவதாரம்! காஞ்சி சந்தவெளி அம்மன் கோவிலில் தொடங்கப்போகும் பிரம்மாண்டம்..
12 நாட்களும் 12 அவதாரம்! காஞ்சி சந்தவெளி அம்மன் கோவிலில் தொடங்கப்போகும் பிரம்மாண்டம்..
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
இந்திரனே வந்து வழிபட்ட தலம்! 'வந்தாரை வாழ வைக்கும்' வல்லக்கோட்டை முருகனின் கல்யாண வைபவம்!
இந்திரனே வந்து வழிபட்ட தலம்! 'வந்தாரை வாழ வைக்கும்' வல்லக்கோட்டை முருகனின் கல்யாண வைபவம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Embed widget