மேலும் அறிய

குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயிலும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.


குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்

இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழாவானது மிகச்சிறப்பாக தூத்துக்குடி மாவட்டம் குலசையில்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. விழா நாட்களில் தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்வேறு வேடங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி உள்பிரகார பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.



குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்

தசரா முதல் நாளன்று துர்க்கை அலங்காரத்திலும், 2-வது நாள்  விசுவகாமேஷ்வரர் அலங்காரத்திலும், 3-வது நாள் பார்வதி அலங்காரத்திலும், 4-வது நாள் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-வது நாள் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், 6-வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 7-வது நாள்  ஆனந்த நடராசர் அலங்காரத்திலும், 8-வது நாள் அலைமகள் அலங்காரத்திலும், 9-வது நாள் கலைமகள் அலங்காரத்திலும் காட்சியளித்து, திருச்சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கும்.


குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்

10-வது நாள் அம்பிகை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருள, தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.பத்து நாட்கள்  நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்

 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில் பக்தர்கள்  கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை அணிந்து விரதம் இருக்க கூடிய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் காப்பு வழங்கப்பட்டது.


குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்

பத்து நாட்கள் வெகு  விமரிசையாக நடைபெறும் தசரா திருவிழாவில் காப்பு அணிந்த பக்தர்கள் ராஜா வேடம், காளி வேடம், அம்மன் வேடம், ஆஞ்சநேயர் வேடம் மற்றும் பெண் வேடம் உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணிக்கை பெற்று அதனை மகிஷாசூரசம்காரம் நடைபெறக்கூடிய பத்தாம் திருநாளில் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். மேலும், மாலை அணிந்த பக்தர்கள் அவர்களது ஊரில் தசரா குடில் அமைத்து அதில் தங்கி விரதம் இருப்பார்கள். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவேளை மதியம் மட்டுமே பச்சரிசி சாதம் உணவு சாப்பிடுவார்கள். 


குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்

இதையொட்டி இன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக ஏழுந்தருளி மகிசாசூரனை வதம் செய்வார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அக்டோபர் 6-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். இதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். 


குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம் குடிநீர் கழிப்பிட வசதி மற்றும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு கடற்கரை திடலில் சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடற்கரையில் ஆங்காங்கே ரோந்து பணியும் நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget