மேலும் அறிய

3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 

Karthigai Deepam Mavali: கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் நாட்டு கார்த்திகை தினத்தன்று கடைபிடிக்கப்படும் மாவளி சுற்றுதல் சடங்கை பற்றி தெரிந்து கொள்வோம் "

மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒவ்வொரு பண்பாட்டிலும் ஒவ்வொரு சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழர்கள் எப்போதுமே இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வந்தனர். தமிழர்களின் சடங்குகளும் கொண்டாட்டங்களும் இயற்கை சார்ந்தே இருந்தன. தமிழர்கள் கொண்டாடிய ஒவ்வொரு விழாக்களும், இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாகவே கொண்டாடப்படுகிறது. 

சங்க காலத்தில் கார்த்திகை தீபம்

அந்த வகையில் பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் கொண்டாடி வரும் விழாவாக, கார்த்திகை தீப விழா இருந்து வருகிறது.

"மழை கால் நீங்கிய மாக விசும்பில்

குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,

அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;

மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,

பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய           

விழவு உடன் அயர,வருகதில் அம்ம" என சங்க காலத்தில் கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டதை அகநானூற்று பாடல் தெரிவிக்கிறது. 

மாவளி சுற்றுதல்

இன்றைய காலகட்டத்தில் கார்த்திகை தீபம் பரிமாணம் அடைந்து வேறு வடிவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் நாட்டு கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. நாட்டு கார்த்திகை தீபத் திருவிழா அன்று, மாவளி சுற்றுதல் என்ற சடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. 

திருவண்ணாமலை, விழுப்புரம் , மயிலாடுதுறை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மாவளி சுற்றுதல் சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான ஓவியம் ஒன்று, இந்தப் பாரம்பரிய சடங்கிற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறைஓவியத்தில் மாவளி சுற்றும் காட்சி இந்த சடங்கு எவ்வளவு முக்கியமானது மற்றும் எவ்வளவு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பதை நமக்கு உணர்த்தி விடுவது. 

மாவளி செய்யும் முறை என்ன ? - karthigai deepam mavali

ஆண் பனை மரத்தில் உருவாகும் பூக்கள் கார்த்திகை தீபத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே சேமித்து வைத்து விடுவார்கள். திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு, பனம்பூவைக் குழி பறித்து அதனுள் வைத்து, எரிய வைத்து கருக்கிவிடுவார்கள். இதனைத் தொடர்ந்து அந்த குழியை மூடி விடுவார்கள். சில நாட்கள் கழித்து அதிலிருந்து, பனம்பூ காரியை எடுத்து அதை நன்கு தூளாக்கி காட்டன் துணியில் சுற்றி பொட்டலமாக வைத்துவிடுவார்கள். 

இப்பொட்டலத்தை பனை ஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதனை இரண்டு முதல் மூன்று முழம் உள்ள வலிமையான கயிற்றில் கட்டி, அதன் பிறகு நெருப்புத் கங்கை அந்த பொட்டலத்தின் மீது வைத்து, அதை எடுத்து சுற்ற தொடங்கினால் மாவளி தயார். "மாவளியோ மாவளி"என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சுற்றி மகிழ்வார்கள். அதிலிருந்து வெளிப்படும் நெருப்பு பொறி இருட்டி பார்ப்பதற்கு ரம்யமாக காட்சியளிக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget