மேலும் அறிய

Aadi Amavasai Tharpanam: ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே..!

ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக கோயில்களின் குளங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், கடற்கரைகளிலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கம் ஆகும்.

தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு தினங்களும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக, தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை தினம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். அதிலும் ஆடி மாதம் வரும் அமாவாசை தினம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க மிகவும் உகந்த நாள் ஆகும்.

தர்ப்பணம்:

நடப்பாண்டிற்கான ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வர உள்ளது. இந்த நிலையில், ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக கோயில்களின் குளங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், கடற்கரைகளிலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கம் ஆகும்.

அமாவாசை நாளில் திதி அளிப்பதால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். நம் முன்னோர்களுக்கு நாம் அமாவாசை, புண்ய கால தர்ப்பணம், வருட ஸ்ரார்தம், மகாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய வாழ்க்கை சூழலில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்வது இயலாது என்பதால், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் நம் முன்னோர்களுக்கு திதி அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.

தர்ப்பணம் அளிப்பது எப்படி?

  • அமாவாசை நாளில் ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
  • தர்ப்பணம் அளிப்பதற்கு ராகு காலம், எமகண்டம் ஆகியவற்றை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
  • முன்னோர்களுக்கு திதி அளிக்கும்போது கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய்வழி என மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
  • தர்ப்பணம் செய்யும் தினத்தில் வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ அல்லது துளசி இலையோ அணிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு விஷ்ணுவின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
  • முன்னோர்களின் படத்தை வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
  • நாம் தர்ப்பணம் வழங்கும் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.
  • முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம் மற்றும் பழ வகைகளை தலை வாழையிட்டு படைக்க வேண்டும்.
  • முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும்போது வீட்டில் தெய்வ காரியங்கள் சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது.
  • தர்ப்பணம் செய்து முடித்த பிறகே தினசரி செய்யும் பூஜைகளை செய்ய வேண்டும்.
  • இயற்கையான முறையில் மரணம் அடைந்தவர்களை தவிர கொலை, தற்கொலை, விபத்து மற்றும் அகால மரணங்கள் மூலம் உயிர் நீத்தவர்களுக்கு முறையாக கர்ம காரியங்கள் செய்ய வேண்டியது அவசியம்.
  • அவ்வாறு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மூலம் அவர்களது ஆன்மா சாந்தியடையும்.

முன்னோர்கள் ஆசிர்வாதம்:

முன்னோர்களுக்கு நாம் முறையாக தர்ப்பணம் அளிப்பது மூலமாக நமது குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல்கள், பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மன உளைச்சல் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். தர்ப்பணம் செய்வதுடன் ஏழைகள், முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு ஆகும். அன்னதானம் செய்ய இயலாதவர்கள் தண்ணீர் கூட தானமாக வழங்கலாம். ஆடி அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடைவதுடன் அவர்களது பரிபூர்ண ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க: Aadi Amavasai 2023: இந்த ஆடியில் 2 அமாவாசை.. எந்த நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது? இதோ பாருங்க..!

மேலும் படிக்க: திருமணத்தடை நீங்க ஆலயத்தை சுற்றி வந்த பக்தர்கள்; சேத்திரபாலபுரத்தில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

தலைப்பு செய்திகள்

திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget