மேலும் அறிய

Aadi Amavasai Tharpanam: ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே..!

ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக கோயில்களின் குளங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், கடற்கரைகளிலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கம் ஆகும்.

தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு தினங்களும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக, தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை தினம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். அதிலும் ஆடி மாதம் வரும் அமாவாசை தினம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க மிகவும் உகந்த நாள் ஆகும்.

தர்ப்பணம்:

நடப்பாண்டிற்கான ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வர உள்ளது. இந்த நிலையில், ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக கோயில்களின் குளங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், கடற்கரைகளிலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கம் ஆகும்.

அமாவாசை நாளில் திதி அளிப்பதால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். நம் முன்னோர்களுக்கு நாம் அமாவாசை, புண்ய கால தர்ப்பணம், வருட ஸ்ரார்தம், மகாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய வாழ்க்கை சூழலில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்வது இயலாது என்பதால், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் நம் முன்னோர்களுக்கு திதி அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.

தர்ப்பணம் அளிப்பது எப்படி?

  • அமாவாசை நாளில் ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
  • தர்ப்பணம் அளிப்பதற்கு ராகு காலம், எமகண்டம் ஆகியவற்றை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
  • முன்னோர்களுக்கு திதி அளிக்கும்போது கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய்வழி என மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
  • தர்ப்பணம் செய்யும் தினத்தில் வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ அல்லது துளசி இலையோ அணிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு விஷ்ணுவின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
  • முன்னோர்களின் படத்தை வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
  • நாம் தர்ப்பணம் வழங்கும் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.
  • முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம் மற்றும் பழ வகைகளை தலை வாழையிட்டு படைக்க வேண்டும்.
  • முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும்போது வீட்டில் தெய்வ காரியங்கள் சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது.
  • தர்ப்பணம் செய்து முடித்த பிறகே தினசரி செய்யும் பூஜைகளை செய்ய வேண்டும்.
  • இயற்கையான முறையில் மரணம் அடைந்தவர்களை தவிர கொலை, தற்கொலை, விபத்து மற்றும் அகால மரணங்கள் மூலம் உயிர் நீத்தவர்களுக்கு முறையாக கர்ம காரியங்கள் செய்ய வேண்டியது அவசியம்.
  • அவ்வாறு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மூலம் அவர்களது ஆன்மா சாந்தியடையும்.

முன்னோர்கள் ஆசிர்வாதம்:

முன்னோர்களுக்கு நாம் முறையாக தர்ப்பணம் அளிப்பது மூலமாக நமது குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல்கள், பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மன உளைச்சல் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். தர்ப்பணம் செய்வதுடன் ஏழைகள், முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு ஆகும். அன்னதானம் செய்ய இயலாதவர்கள் தண்ணீர் கூட தானமாக வழங்கலாம். ஆடி அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடைவதுடன் அவர்களது பரிபூர்ண ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க: Aadi Amavasai 2023: இந்த ஆடியில் 2 அமாவாசை.. எந்த நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது? இதோ பாருங்க..!

மேலும் படிக்க: திருமணத்தடை நீங்க ஆலயத்தை சுற்றி வந்த பக்தர்கள்; சேத்திரபாலபுரத்தில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget