மேலும் அறிய
Jayakandhan : எழுத்துலக இமயம் ஜெயகாந்தனின் ஆழமான அழுத்தமான வரிகள்!
ஜெயகாந்தனின் பிறந்தநாளையொட்டி அவர் எழுதிய சில அற்புதமான வரிகளை இங்கு காண்போம்.

ஜெயகாந்தன்
1/6

தமிழ் எழுத்துலகின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஜெயகாந்தன், அவரது பிறந்தநாளையொட்டி அவர் எழுதிய சில அற்புதமான வரிகளை இங்கு காண்போம்.
2/6

நான் ஒரு போதும் எதையும் அவமானமாக கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்.
3/6

சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்தவிதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்கு தவறு!
4/6

ஒழுக்கமென்பது ஆண்-பெண் உறவு சம்மந்தப்பட்டது மட்டுமே என்று நினைப்பது ரொம்பக் கொச்சையான தீர்ப்பு.
5/6

நீங்கள் அழகு என்றால் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது, யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள்.
6/6

ஆதிக்கம் தான் எதிரியே தவிர யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும்.
Published at : 24 Apr 2023 05:22 PM (IST)
Tags :
Jayakandhanமேலும் படிக்க
Advertisement
Advertisement