Ruby Roman Grapes: உலகின் விலை உயர்ந்த திராட்சை.. இது உலக சாதனை… ஒரே ஒரு ரூபி ரோமன் திராட்சையின் விலை தெரியுமா?
ஜப்பானில் இருந்து வந்த ரூபி ரோமன் திராட்சையின் விலை ரூ.8 லட்சத்திற்கும் மேல். அவை மிகவும் விலை உயர்ந்த திராட்சை என்று பெயர் பெற்றுள்ளன.

பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலை ஏற்றம் என்பது நாட்டில் பொதுவாக நடக்கக்கூடியது. நாமும் அதனை சாதாரணமாக விடுவதில்லை, எங்கு சென்றாலும் அன்றாட உபயோகப் பொருட்கள் முதல் நுகர்பொருட்கள் வரை, எல்லா இடங்களிலும் பேரம் பேசுவது இந்தியர்கள் பழக்கம். ஆனால் இந்த திராட்சை விலையை கண்டு பேரம் பேச கூட யாரும் அருகில் நிற்க மாட்டார்கள்போல. அப்படி ஒரு விலையில் திராட்சை கிடைக்கிறது.
ரூபி ரோமன் திராட்சை
பலவிதமான திராட்சைகள் உள்ளன, அதில் ஒன்றுதான் இடப ரூபி ரோமன் திராட்சை. பேரம் பேசினாலும், அவற்றின் விலையை நீங்கள் காணும்போது அதிர்ச்சியைத் தரும். ஜப்பானில் இருந்து வந்த ரூபி ரோமன் திராட்சையின் விலை ரூ.8 லட்சத்திற்கும் மேல். அவை மிகவும் விலை உயர்ந்த திராட்சை என்று பெயர் பெற்றுள்ளன. மேலும் அவை "உலகின் மிக விலையுயர்ந்த திராட்சை" என்று உலக சாதனை புத்தகத்திலும் அதிகாரப்பூர்வமாக இடம் பிடித்துள்ளன.

என்ன ஸ்பெஷல்?
ஒரு ரூபி ரோமன் திராட்சை சராசரி திராட்சையை விட நான்கு மடங்கு பெரியதாக இருக்குமாம். இருந்தாலும் இவ்வளவு விலை ஆகாது என்கிறார்கள் விலையை கேட்பவர்கள். இதற்கு காரணம் இதன் கூடுதலான சுவை மற்றும் நிறம்தான் என்கிறார்கள். இதன் அறுவடை ஜூலை மாதத்தில் தொடங்குகிறது, மேலும் அவை சரியான நேரத்தில் சந்தைக்குச் செல்கின்றன, இவற்றை, ஜப்பானியர்கள் விடுமுறை நாட்களில் பரிசுகளை வழங்கும் ஒரு பொதுவான நடைமுறையாக வைத்துள்ளனர். ரூபி ரோமன் திராட்சை 2020 இல் ஏலத்தில் $12,000 (ரூ. 9.76 லட்சம்) ற்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு திராட்சை ரூ.30,000
இம்முறை ஒவ்வொரு திராட்சையும் சுமார் ரூ. 30,000 விலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 30 திராட்சைகள் கொண்ட ஒரு தொகுதி ஹியோகோ ப்ரிபெக்சரில் உள்ள அமகாசாகியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியால் கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கு 2020இல் ஏலம் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. ஜப்பானியர்கள் இந்த திராட்சை போன்ற சில பழங்களில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளனர். அதனாலேயே இந்த விலைக்கு அது விற்கப்படுகிறது.

ஜப்பானியர்களின் பழத்தின் மீதான ஆர்வம்
ரோமானிய திராட்சைகள் இஷிகாவா மாகாணத்தில் வளர்க்கப்படுகின்றன, மேலும் அவை சந்தையில் அதிக மதிப்பைக் கொண்டுள்ளன, ஏனெனில் பழங்கள் பெரும்பாலும் அன்பானவர்களுக்கு "பாராட்டு மற்றும் உறவுகளை வளர்ப்பதற்கான அடையாளமாக" பரிசுகளாக வழங்கப்படுகின்றன. மேலும் ஜப்பானிய பல்பொருள் அங்காடிகள் பெரும்பாலும் கறைகள் உள்ள அல்லது சரியான வடிவம் இல்லாத பழங்களை விற்பனை செய்வதில்லை. ஜப்பானில் உள்ள பழங்கள் தரமான தரத்தை பூர்த்தி செய்வதற்காக கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. திராட்சைகள் சரியாக மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன - சுப்பீரியர், ஸ்பெஷல் சுப்பீரியர் மற்றும் பிரீமியம் என்று தரம் பிரிக்கப்படுகின்றன. பிரீமியமாகத் தகுதிபெற, ஒரு திராட்சை முற்றிலும் சரியானதாக இருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டில் ரோமன் திராட்சைகளின் இரண்டு தொகுதிகள் மட்டுமே பிரீமியம் தரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் எதுவுமே அதற்கு தகுதி பெறவில்லை என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















