மேலும் அறிய

Sri Lankan protest: இலங்கையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல்; மனித உரிமை ஆணையம் கண்டனம்

இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்:
 
இலங்கையில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி அடுத்து அந்நாட்டில் ஆட்சியில் இருந்த ராஜபக்சவினரை வெளியேறுமாறு வலியுறுத்தி பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
 
 இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு சென்ற நிலையில் ,புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க  தேர்வு செய்யப்பட்டார்.
 
நாட்டு மக்கள் தாமாகவே முன்வந்து  அரசுக்கெதிராக முன்னெடுத்த போராட்டங்களை சில அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. மக்களின் போராட்டத்தினால் ஆட்சி மாற்றம்  ஏற்பட்டது என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்களுக்கு உரிய மரியாதையையும் ,கௌரவத்தையும் அளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும்.
 
ஆனாலும் போராட்டத்தை ஏற்படுத்தி ஒரு அரசை கவிழ்த்து, மீண்டும் ஒரு புதிய அரசை ஏற்படுத்திய மக்களுக்கு, ஆட்சியாளர்கள் வழங்கும் கௌரவம் இதுதானா என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. மக்களின் அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தை பயன்படுத்தி தான் ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவிக்கு வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என எதிர்கட்சிகள் தெரிவித்து இருக்கின்றன.
 
மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்:
 
 இந்நிலையில் இலங்கையில் இன்று காலையில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட மூர்க்கத்தனமான  தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதேபோல் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பேணப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய, தாமாகவே முன்வந்து விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டு இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என மனித உரிமை  ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Sri Lankan protest: இலங்கையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல்; மனித உரிமை ஆணையம் கண்டனம்
 
இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்:
 
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே வன்முறையில் ஈடுபட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்தியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதேபோல் இலங்கை ராணுவத்தினரின் இவ்வாறான செயல்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
TN RAIN: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
TN RAIN: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Train: ரயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்யலாமா.? பிடிபட்டால் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?
ரயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்யலாமா.? பிடிபட்டால் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
IND vs SA Test: தென்னாப்ரிக்காவை சமாளிக்குமா இந்தியா? டெஸ்டில் யார் ஆதிக்கம், கில் படைக்கான சவால் என்ன?
IND vs SA Test: தென்னாப்ரிக்காவை சமாளிக்குமா இந்தியா? டெஸ்டில் யார் ஆதிக்கம், கில் படைக்கான சவால் என்ன?
Trump Tariff Dividend: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1.77 லட்சம்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Trump Tariff Dividend: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1.77 லட்சம்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Embed widget