மேலும் அறிய

Syria Saydnaya Prison: மனித கசாப்புக் கடை - நிமிடங்களில் தூக்கு தண்டனை, குவியும் பிணங்கள் - பாலியல் சித்திரவதை..!

Syria Saydnaya Prison: மனிதர்களின் கசாப்புக் கடை என்று அழைக்கப்படும் சிரியாவின் சிறைச்சாலை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Syria Saydnaya Prison: மனிதர்களின் கசாப்புக் கடை என்று அழைக்கப்படும் சிரியாவின் செட்னாயா சிறைச்சாலையில் இருந்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். 

சிரியா சிறைச்சாலை:

சிரியாவில் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் வெளிநாடு தப்பியோடிய நிலையில்,  கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ், ஹமா மற்றும் அலெப்போ போன்ற நகரங்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளை விடுவித்தனர். இந்த சிறைகளில் மிகவும் பிரபலமானது செட்னாயா, இது பெரும்பாலும் 'மனித படுகொலை' சிறைச்சாலை என்று அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் 2021 அறிக்கையின்படி, செட்னாயா மட்டும் 30,000 க்கும் அதிகமானோர் உட்பட சிரிய ஆட்சி சிறைகளில் ஒரு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபையின் விசாரணையில், "செட்னாயாவில் கொலைகள், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாக காணாமல் போவது மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அவை பொதுமக்கள் மீதான தாக்குதல்களைப் போலவே முறையாகவும் பரவலாகவும் உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. செட்னாயாவில் நடந்த இந்த சம்பவங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்படுவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

செட்னாயா வெகுஜன தூக்கு தண்டனை:

மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி,செட்னாயா ராணுவச் சிறைச்சாலையில் இரண்டு தடுப்பு மையங்கள் இருந்தன. அங்கு 2011 கிளர்ச்சிக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பொதுமக்களும், போராட்டங்களில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளும் அடைத்து வைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான கைதிகள் ரகசியமாக தூக்கிலிடப்பட்டனர் என்று அறிக்கை கூறுகிறது. "விசாரணைகளில்' பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றனர். இந்த விசாரணைகள்வெறும் ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை மட்டுமேநீடிக்கும். மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது, ​​சிறை அதிகாரிகள் கொண்டாட்டங்களை பின்பற்றுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை உத்தரவு மற்றும் சித்திரவதை

செட்னாயாவில் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக மன்னிப்பு சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, "சிறைவாசிகள் தொடர்ந்து கடுமையான தாக்குதல் மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகியவை மறுக்கப்பட்டது, இது தொற்று மற்றும் நோய் பரவுவதற்கு வழிவகுத்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டபோது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த ஒரு கைதியை பற்றி அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. அதில், "முன்னாள் செட்னாயா கைதியிடம் இருந்து நீங்கள் உண்மையைக் கேட்பது அரிது. ஏனென்றால் அது மிகவும் அவமானமாக இருந்தது. காவலர்கள் எங்களுடைய ஆடைகளை களைந்து குளியலறைக்குச் செல்லச் சொல்வார்கள், பின்னர் இளைய அல்லது வயதான பையனைத் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் அவர் மீது மோசமான செயல்களை முன்னெடுப்பார்கள். யாரும் அதை வெளியே சொல்ல மாட்டார்கள், ஆனால் அது அடிக்கடி நடந்தது" என அந்த கைதி தெரிவித்துள்ளார்.

”கைதிகள் விடுதலையால் ஆபத்து அதிகம்”

இந்நிலையில் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, கிளர்ச்சிப் படைகள் சிறைகளை கைப்பற்றி, செட்னாயா உள்ளிட்ட சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்தனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வது வரவேற்கத்தக்கது, ஆனால் சிறிதும் யோசிக்காமல் கைதிகளை விடுவிப்பது பெரும் ஆபத்தை தரக்கூடியது என மனித உரிமைகளுக்கான சிரிய நெட்வொர்க்கின் நிறுவனர் குர்தீன் அப்துல்கானி தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
Embed widget