மேலும் அறிய

Syria Saydnaya Prison: மனித கசாப்புக் கடை - நிமிடங்களில் தூக்கு தண்டனை, குவியும் பிணங்கள் - பாலியல் சித்திரவதை..!

Syria Saydnaya Prison: மனிதர்களின் கசாப்புக் கடை என்று அழைக்கப்படும் சிரியாவின் சிறைச்சாலை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Syria Saydnaya Prison: மனிதர்களின் கசாப்புக் கடை என்று அழைக்கப்படும் சிரியாவின் செட்னாயா சிறைச்சாலையில் இருந்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். 

சிரியா சிறைச்சாலை:

சிரியாவில் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் வெளிநாடு தப்பியோடிய நிலையில்,  கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ், ஹமா மற்றும் அலெப்போ போன்ற நகரங்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளை விடுவித்தனர். இந்த சிறைகளில் மிகவும் பிரபலமானது செட்னாயா, இது பெரும்பாலும் 'மனித படுகொலை' சிறைச்சாலை என்று அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் 2021 அறிக்கையின்படி, செட்னாயா மட்டும் 30,000 க்கும் அதிகமானோர் உட்பட சிரிய ஆட்சி சிறைகளில் ஒரு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபையின் விசாரணையில், "செட்னாயாவில் கொலைகள், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாக காணாமல் போவது மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அவை பொதுமக்கள் மீதான தாக்குதல்களைப் போலவே முறையாகவும் பரவலாகவும் உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. செட்னாயாவில் நடந்த இந்த சம்பவங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்படுவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

செட்னாயா வெகுஜன தூக்கு தண்டனை:

மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி,செட்னாயா ராணுவச் சிறைச்சாலையில் இரண்டு தடுப்பு மையங்கள் இருந்தன. அங்கு 2011 கிளர்ச்சிக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பொதுமக்களும், போராட்டங்களில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளும் அடைத்து வைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான கைதிகள் ரகசியமாக தூக்கிலிடப்பட்டனர் என்று அறிக்கை கூறுகிறது. "விசாரணைகளில்' பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றனர். இந்த விசாரணைகள்வெறும் ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை மட்டுமேநீடிக்கும். மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது, ​​சிறை அதிகாரிகள் கொண்டாட்டங்களை பின்பற்றுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை உத்தரவு மற்றும் சித்திரவதை

செட்னாயாவில் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக மன்னிப்பு சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, "சிறைவாசிகள் தொடர்ந்து கடுமையான தாக்குதல் மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகியவை மறுக்கப்பட்டது, இது தொற்று மற்றும் நோய் பரவுவதற்கு வழிவகுத்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டபோது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த ஒரு கைதியை பற்றி அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. அதில், "முன்னாள் செட்னாயா கைதியிடம் இருந்து நீங்கள் உண்மையைக் கேட்பது அரிது. ஏனென்றால் அது மிகவும் அவமானமாக இருந்தது. காவலர்கள் எங்களுடைய ஆடைகளை களைந்து குளியலறைக்குச் செல்லச் சொல்வார்கள், பின்னர் இளைய அல்லது வயதான பையனைத் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் அவர் மீது மோசமான செயல்களை முன்னெடுப்பார்கள். யாரும் அதை வெளியே சொல்ல மாட்டார்கள், ஆனால் அது அடிக்கடி நடந்தது" என அந்த கைதி தெரிவித்துள்ளார்.

”கைதிகள் விடுதலையால் ஆபத்து அதிகம்”

இந்நிலையில் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, கிளர்ச்சிப் படைகள் சிறைகளை கைப்பற்றி, செட்னாயா உள்ளிட்ட சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்தனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வது வரவேற்கத்தக்கது, ஆனால் சிறிதும் யோசிக்காமல் கைதிகளை விடுவிப்பது பெரும் ஆபத்தை தரக்கூடியது என மனித உரிமைகளுக்கான சிரிய நெட்வொர்க்கின் நிறுவனர் குர்தீன் அப்துல்கானி தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
TN weather Reoprt: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
CM Stalin: பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
Embed widget