மேலும் அறிய

இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை நிறுத்தியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்..

விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாமையினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சரக்கு விமான சேவையை முற்றும் முழுதாக இடைநிறுத்தி இருக்கிறது.

இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை நிறுத்தியது  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு எரிபொருள் தட்டப்பாடு நிலவுகிறது.
 
இந்நிலையில் விமானங்களுக்கான எரிபொருளுக்கு அங்கு பற்றாக்குறை நிலகுவதாக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அந்நாட்டிற்கு வரும் விமானங்களின்   எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தனது போக்குவரத்தினை ஆங்காங்கே குறைத்திருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்தியாவுக்கான சரக்கு போக்குவரத்தினை முற்றுமுழுதாக இடை நிறுத்தி இருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்திருக்கிறது.இதனால் டன் கணக்கான சரக்கு பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெயாகி இருக்கிறது.இலங்கையின் கொழும்பிலிருந்து சென்னை ,மதுரை ,திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு சரக்கு விமான சேவைகளை   ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்‌ மேற்கொண்டு வருகிறது.
 
முன்னதாக நாளாந்த சேவைகளை குறைத்து வழங்கி வந்த நிலையில் ,தற்போது முழுவதுமாக சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது .
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ,சென்னைக்கு 3 சரக்கு விமான சேவைகளையும், திருச்சிக்கு மூன்று சேவைகளையும் ,மதுரைக்கு ஒரு சரக்கு விமான சேவையையும் வழங்கி வந்தது.
 
இன்னிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சென்னை, மதுரை, திருச்சிகான‌ சரக்கு விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறைத்து இருந்தது.தற்போது அங்கு விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாமையினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சரக்கு விமான சேவையை முற்றும் முழுதாக இடைநிறுத்தி இருக்கிறது.சரக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 10 டன் பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் பல நாடுகளில் இருந்து  இலங்கைக்கு வரும் விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறைந்ததால் விமான சேவைகள் குறைக்கப்பட்டிருப்பதாக இலங்கை விமான துறை அமைச்சர் நிமல் சிரிப்பாலடி சில்வா தெரிவித்திருக்கிறார்.எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கைக்கு வரும் சில விமான சேவைகள் இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகளிடமிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் பட்சத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாடுகளில் இருந்து வரும் விமான சேவைகள் குறைக்கப்படும் பட்சத்தில் இலங்கைக்கான வருமானம் என்பது மேலும் மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.சர்வதேச நாடுகளில் இருந்து வரும் விமான சேவைகளில் முக்கியமாக சுற்றுலாத்துறை என்பது இலங்கையில் ஓரளவு வருமானம் ஈட்டக்கூடிய துறையாக இருந்து வந்தது.
 
தற்பொழுது விமான சேவைகள் அங்கு குறைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா துறையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.ஏற்றுமதி ,இறக்குமதி , சுற்றுலாத்துறை ,வெளிநாட்டு முதலீடுகள் போன்றன முழுவதுமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பணியாளர்களாக வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் குறையும் என கூறப்படுகிறது.இதனை அடுத்து விமான சேவைகளில் திருத்தங்களை செய்து, இலங்கையின் அந்நிய செலாவணிக்கு பாதிப்பு இல்லாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அமைச்சர்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
 
கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை என்பது பாதிக்குப் பாதி குறைவடைந்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.இதனால் விமான சேவைகளை ஓரளவாவது சரி செய்யும் பொருட்டு, எரிபொருள் இறக்குமதியை சில தனியார்  நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை இலங்கை அரசு எடுத்திருக்கிறது.இலங்கைக்கு நாள்தோறும் மேற்கொள்ளும் விமான போக்குவரத்து சேவையால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஓரளவு வருமானம் ஈட்டக் கூடிய வகையில் இருந்தது .
 
இந்நிலையில் விமான சேவைகள் பாதிக்கு பாதி குறைக்கப்பட்டால் இலங்கையின் பொருளாதாரத்தில் அது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உலக நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவை, சரக்கு போக்குவரத்து போன்றன இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஓரளவு உதவியாக இருந்து வந்தது .இருந்த போதும் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனையால் சரக்கு போக்குவரத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தி இருப்பது இலங்கைக்கான வருமானத்தை மேலும் பாதிப்படைய செய்வதாகவே அமைந்திருக்கிறது.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Embed widget