மேலும் அறிய

"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!

போரால் வாழ்க்கையை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவிடும் வகையில் 2.5 மில்லியின் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கி இருக்கிறது.

இஸ்ரேல் நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவிடும் வகையில் இரண்டாவது  தவணையாக நிதி உதவி வழங்கியுள்ளது இந்தியா. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (UNRWA) 2.5 மில்லியின் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கி இருக்கிறது.

நிலைகுலைந்த பாலஸ்தீனியர்கள்:

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி, மோதல் தொடங்கியது.

தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போர், அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. 

போரால் வாழ்க்கையை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவிடும் வகையில் ஆண்டுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என இந்தியா உத்தரவாதம் அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2024-25 ஆண்டுக்கான மீதமுள்ள 2.5 மில்லியின் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கி உள்ளது.

ஓடோடி சென்று உதவிய இந்தியா:

இதற்கு நன்றி தெரிவித்துள்ள பாலஸ்தீனிய தூதரகம், "இரண்டாவது தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை தந்ததற்கு இந்திய அரசாங்கத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாலஸ்தீன அகதிகளின் நலனுக்கான தங்களின் கடமையை நிறைவேற்றி, ஐநாவுக்கு மனிதாபிமான உதவி மற்றும் மருந்துகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிமொழியையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்" என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாலஸ்தீன தூதர் அபேத் எல்ராசெக் அபு ஜாசர் கூறுகையில், "இந்தியாவின் ஆதரவை பாலஸ்தீனியர்கள் மதிக்கிறார்கள். விடுதலை, சுதந்திரம் மற்றும் எங்கள் சொந்த அரசை நிறுவுவதற்கான மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வரை அரசியல் மற்றும் பொருள் மட்டங்களில் அதன் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பல ஆண்டுகளாக, பாலஸ்தீனிய அகதிகளுக்கான கல்வி, சுகாதாரம், நிவாரணம் மற்றும் சமூக சேவைகள் உட்பட ஐநாவின் முக்கிய திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு 40 மில்லியன் டாலர் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: "விமானத்தை வேத கால முனிவர்தான் கண்டுபிடிச்சாரு" புது கதையை அவிழ்த்துவிட்ட ஆளுநர்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget