மேலும் அறிய

பெயர் தெரியாத புதிய நோய்... 5 நாள்களுக்கு பொது முடக்கத்தை அறிவித்த வட கொரியா..!

வட கொரியாவில் பெயர் தெரியாத சுவாச நோய் அதிகரித்து வருவதால் அங்கு ஐந்து நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் பெயர் தெரியாத சுவாச நோய் அதிகரித்து வருவதால் அங்கு ஐந்து நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை, தென் கொரியா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து வட கொரிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தென் கொரியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், கொரோனா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தலைநகரில் வசிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதி வரை தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது. 

உடல் வெப்பநிலையை அடிக்கடி சோதனை செய்து சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று, பியோங்யாங் நகர மக்கள் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே கணித்து தேவையான பொருள்களை தங்களின் வீடுகளில் சேமித்த வைத்தனர்.

நாட்டின் பிற பகுதிகளில், கட்டுப்பாடுகள் ஏதேனும் அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. கடந்தாண்டுதான், கொரோனா பரவல் ஏற்பட்டிருப்பதாக வட கொரியா முதல்முதலாக அறிவித்தது. ஆனால், ஆகஸ்ட் மாதமே, கொரோனாவை வெற்றி கொண்டதாக அந்நாடு அறிவித்தது.

வட கொரியாவில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அந்நாடு உறுதி செய்யவே இல்லை. இதற்கு காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்வதற்கான வசதி அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், தினமும் எத்தனை பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து அந்நாடு தெரிவித்து தகவல் வெளியிட்டு வந்தது. மொத்தம் 2 கோடியே 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட  வட கொரியாவில் 47 லட்சம் பேருக்கு இம்மாதிரியான காய்ச்சல் ஏற்பட்டதாக அந்நாடு தெரிவித்திருந்தது.

கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல், எத்தனை பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது பரவி வரும் சுவாச நோய் உள்பட காய்ச்சலை கட்டுப்படுத்த அந்நாட்டில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால், ஊரடங்கு குறித்து எந்த தகவலையும் அரசு செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது. கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

ஆனால், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனாவில் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. 

தலைப்பு செய்திகள்

US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget