மேலும் அறிய

போரால் பற்றி எரியும் இஸ்ரேல்.. குடும்பத்துடன் சிக்கிய இந்திய எம்.பி - பதறிபோன முதலமைச்சர்

இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்கு சிக்கியிருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் ஐடி வேலை செய்பவர்களும் மாணவர்களே ஆவர்.

யாரும் எதிர்பாராத சூழலில், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் இஸ்ரேல் மட்டும் இன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹமாஸ் படையினரின் ராக்கெட் தாக்குதல் இஸ்ரேலை நிலைகுலைய வைத்துள்ளது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இஸ்ரேல் போரை தொடங்கியுள்ளது.

ஹமாஸ் படையின் தாக்குதலால் அதிர்ந்து போன இஸ்ரேல்:

வான் வழியாக மட்டும் இன்றி நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இந்திய மக்களுக்கு இந்திய மற்றும் பாலஸ்தீன தூதரகங்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்கு சிக்கியிருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் ஐடி வேலை செய்பவர்களும் மாணவர்களே ஆவர். மேலும், இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர்.

இவர்களின் பாதுகாப்பு நிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், "இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் கவனமுடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தயவு செய்து எச்சரிக்கையுடன் செயல்படவும், தேவை இன்றி வெளியே செல்வதை தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலில் சிக்கிய மாநிலங்களவை உறுப்பினர்:

இந்த நிலையில், பரபரப்பை கிளப்பும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வான்வீரோய் கர்லூகியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் இஸ்ரேலில் சிக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேகாலயாவில் ஆளுங்கட்சியாக உள்ள தேசிய மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் இவர், ஆன்மீக பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

இவருடன், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 24 பேர் பெத்லகேம் நகரில் மாட்டி கொண்டுள்ளனர். இந்தியாவுக்கு இவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா தகவல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இருந்து அவர்களை எகிப்துக்கு அழைத்து செல்ல இந்திய தூதரகம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, மிசோரம் மற்றும் மணிப்பூரில் இருந்து யூத மக்கள் அதிக அளவில் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அதேபோல, அவசர உதவிக்கு தொடர்பு கொள்வதற்கு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: Israel Palestine History: ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு! இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் பின்னணி என்ன? - ஓர் பார்வை


 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Embed widget