மேலும் அறிய

தொடரும் துப்பாக்கிச்சூடு...மேயர் உள்பட 18 பேர் கொடூர கொலை...மெக்சிகோவில் நடந்தது என்ன?

இந்த கொடூர சம்பவத்தை குரேரோ மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உறுதி செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நகராட்சி மண்டபம் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், சரமாரியாக சுட்டதில் மேயர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தை குரேரோ மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உறுதி செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆயுதமேந்திய குழு, முகமூடிகளை அணிந்து இரண்டு எஸ்யூவி வாகனங்களை ஓட்டி வந்துள்ளனர். மேயர் கான்ராடோ மெண்டோசா மற்றும் அவரது தந்தையும் முன்னாள் மேயருமான ஜுவான் மெண்டோசாவை அவர்கள் சுட்டு கொலை செய்துள்ளனர். அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள பாதிக்கப்பட்ட பத்து பேரில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் ஆவர்.

ஆளும் மொரீனா கட்சியின் உறுப்பினரான குரேரோ ஆளுநர் ஈவ்லின் சல்கடோ பினெடா, இந்த கொடூர சம்பவம் குறித்து தெளிவுபடுத்துவதற்கு அவசர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தை கேட்டுக் கொண்டார். "நகராட்சி தலைவர் மற்றும் உள்ளூர் அரசாங்க அலுவலர்களுக்கு எதிரான தீங்கிழைக்கும் செயலை செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடக்கூடாது" என சல்கடோ பினெடா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், கோலிமா மாநிலத்தில் போதை பொருளை கடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஜாலிஸ்கோ நியூவா ஜெனரேசியன் கார்டெல் என்ற தீவிரவாத கும்பலின் தலைவரும் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அங்கு கும்பல் வன்முறைகள் வெடித்தன.
மத்திய மெக்சிகோவில் உள்ள 25க்கும் மேற்பட்ட கடைகள் எரித்து நாசப்படுத்தப்பட்டன. பல கார்களுக்கு கொளுத்தப்பட்டு தீக்கிரையாகின. 

இதன் தொடர்ச்சியாக, இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. சான் மிகுவல் டோடோலாபன், மெக்சிகோவின் சுற்றுலாத் தலமான அகாபுல்கோ உள்ள அதே மாநிலத்தில் உள்ளது. குரேரோவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், இது தொடர்பாக இன்னும் பதிலளிக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலர்கள், மாநில மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் சேர்ந்து, காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளனர் என குரேரோவின் பொதுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தாய்லந்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் பல்வேறு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்த காப்பகத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

துப்பாக்கிச் சூடு நடப்பதை பார்த்து அங்கிருந்த குழந்தைகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர், அங்கிருந்து தப்பித்து சென்றார். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தனது மனைவி மற்றும் குழந்தை மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget