மேலும் அறிய

தொடரும் துப்பாக்கிச்சூடு...மேயர் உள்பட 18 பேர் கொடூர கொலை...மெக்சிகோவில் நடந்தது என்ன?

இந்த கொடூர சம்பவத்தை குரேரோ மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உறுதி செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நகராட்சி மண்டபம் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், சரமாரியாக சுட்டதில் மேயர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தை குரேரோ மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உறுதி செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆயுதமேந்திய குழு, முகமூடிகளை அணிந்து இரண்டு எஸ்யூவி வாகனங்களை ஓட்டி வந்துள்ளனர். மேயர் கான்ராடோ மெண்டோசா மற்றும் அவரது தந்தையும் முன்னாள் மேயருமான ஜுவான் மெண்டோசாவை அவர்கள் சுட்டு கொலை செய்துள்ளனர். அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள பாதிக்கப்பட்ட பத்து பேரில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் ஆவர்.

ஆளும் மொரீனா கட்சியின் உறுப்பினரான குரேரோ ஆளுநர் ஈவ்லின் சல்கடோ பினெடா, இந்த கொடூர சம்பவம் குறித்து தெளிவுபடுத்துவதற்கு அவசர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தை கேட்டுக் கொண்டார். "நகராட்சி தலைவர் மற்றும் உள்ளூர் அரசாங்க அலுவலர்களுக்கு எதிரான தீங்கிழைக்கும் செயலை செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடக்கூடாது" என சல்கடோ பினெடா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், கோலிமா மாநிலத்தில் போதை பொருளை கடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஜாலிஸ்கோ நியூவா ஜெனரேசியன் கார்டெல் என்ற தீவிரவாத கும்பலின் தலைவரும் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அங்கு கும்பல் வன்முறைகள் வெடித்தன.
மத்திய மெக்சிகோவில் உள்ள 25க்கும் மேற்பட்ட கடைகள் எரித்து நாசப்படுத்தப்பட்டன. பல கார்களுக்கு கொளுத்தப்பட்டு தீக்கிரையாகின. 

இதன் தொடர்ச்சியாக, இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. சான் மிகுவல் டோடோலாபன், மெக்சிகோவின் சுற்றுலாத் தலமான அகாபுல்கோ உள்ள அதே மாநிலத்தில் உள்ளது. குரேரோவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், இது தொடர்பாக இன்னும் பதிலளிக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலர்கள், மாநில மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் சேர்ந்து, காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளனர் என குரேரோவின் பொதுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தாய்லந்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் பல்வேறு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்த காப்பகத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

துப்பாக்கிச் சூடு நடப்பதை பார்த்து அங்கிருந்த குழந்தைகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர், அங்கிருந்து தப்பித்து சென்றார். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தனது மனைவி மற்றும் குழந்தை மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Embed widget