மேலும் அறிய

தொடரும் குண்டு மழை: கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள்.. அடையாளம் காண உடலில் பெயர் எழுதும் துயரம்

காசாவில் குண்டு மழை தொடர்ந்து வரும் நிலையில், அதில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்துவிட்டால் அடையாளம் காண்பதற்காக அவர்களின் உடல்களில் பெயர் எழுதும் துயரமான சூழல் உருவாகியுள்ளது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 7ஆம் தேதி மோதல் தொடங்கியது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போர், அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.

பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 3,500 குழந்தைகள் உள்பட 7,703 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

நாலா புறமும் தாக்குதல்:

இதுநாள் வரை, வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், நிலத்தின் வழியேயும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், தற்போது எரிபொருள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவசர உதவி தடைபடும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது.

காசாவில் குண்டு மழை தொடர்ந்து வரும் நிலையில், அதில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்துவிட்டால் அடையாளம் காண்பதற்காக அவர்களின் உடல்களில் பெயர் எழுதும் துயரமான சூழல் உருவாகியுள்ளது. சாரா அல்-காலிடி என்ற பெண், தால் அல்-ஹவா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள்:

அங்கு, நேற்று இரவு முழுவதும் குண்டுகள் வீசப்பட்டு வந்ததால் கான் யூனிஸ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் என எண்ணி, அவர் சென்றுள்ளார். ஆனால், உறவினர் வீட்டில் சாரா பார்த்த சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாக்குதலில் மரணம் அடைந்துவிட்டால், அடையாளம் காண்பதற்காக குழந்தைகளின் உடலில் அவர்களது உறவினர்கள் பெயர் எழுதுவதை பார்த்து துயரத்தில் ஆழ்ந்துள்ளார்.

தானும், தனது குழந்தைகளின் உடலில் பெயர் எழுதினால் அது துரதிஷ்டமாத மாறிவிடும் என எண்ணியுள்ளார். ஆனால், அல்-ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர், குழந்தைகளின் உடலில் பெயர் எழுதுவதை கண்டு, மனம் மாறியுள்ளார். இதுகுறித்து உருக்கமாக பேசிய அவர், "காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் கொல்லப்படும் இந்த குழந்தைகள் வெறும் எண்கள் அல்ல. பெயர்கள் அல்ல. கதைகள் மற்றும் கனவுகள். கொல்லப்பட்ட இந்த குழந்தைகளைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

நேற்று இரவு, காசா முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை இஸ்ரேல் துண்டித்துள்ளது. இது, போர் குற்றம் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 1.4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் - காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் - தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்துள்ளனர். வடக்கு காசாவில் வசிப்பவர்கள், தெற்கே தப்பிச் செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என பாலஸ்தீனியர்கள் கூறி வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
Embed widget