![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
BRAZIL: கல்லறையில் செக்ஸ்! தேவாலயத்துக்கு வந்தவர்களுக்கு பகீர் கொடுத்த ஜோடி!! குவியும் கண்டனம்!!
ஒரு கல்லறையின் மேல் உடலுறவு கொள்வதன் மூலம் ஒரு ஜோடி இறந்தவர்களை அவமரியாதை செய்வதை வீடியோ காட்டுகிறது.
![BRAZIL: கல்லறையில் செக்ஸ்! தேவாலயத்துக்கு வந்தவர்களுக்கு பகீர் கொடுத்த ஜோடி!! குவியும் கண்டனம்!! BRAZIL COUPLE CAUGHT HAVING INTERCOURSE GRAVEYARD BRAZIL: கல்லறையில் செக்ஸ்! தேவாலயத்துக்கு வந்தவர்களுக்கு பகீர் கொடுத்த ஜோடி!! குவியும் கண்டனம்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/f6c9c9fb873c4526aabd6c8b42fe1eb8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேவாலயத்தில் மக்கள் முன்னிலையில் ஒரு ஜோடி கல்லறையில் உடலுறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பிரேசில் மாநிலமான பாராவில் உள்ள இட்டாய்டுபா நகராட்சியில் சாம்பல் புதன்கிழமை தினத்தன்று இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சாம்பல் புதன் ஒரு கிறிஸ்தவ புனித நாள் ஆகும். இந்த நாளில் இருந்து ஈஸ்டருக்கு விரதம் இருப்பார்கள். இந்த நாளில் ஒரு ஜோடி தேவாலயத்தில் உள்ள கல்லறையின் மேல் உடலுறவு கொண்டுள்ளனர். அங்குள்ளவர்களால் இது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
Crime : மிஸ்டுகால் மூலம் இளம்பெண்களுக்கு வலை! நிர்வாணப்படம் காட்டி பணம் மோசடி! சிக்கிய இளைஞர்!
இந்த காட்சிகள் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. அது வேகமாகவும் வைரலானது. இந்த ஜோடி ஒரு கல்லறையின் மேல் உடலுறவு கொண்டது படமாக்கப்பட்டதாகவும், இந்த ஜோடி இறந்தவர்களை அவமரியாதை செய்வதை வீடியோ காட்டுவதாகவும் உள்ளூர் ஊடகமான போர்டல் ஜிரோ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிரேசிலில் ஒரு பல்பொருள் அங்காடி குப்பைத் தொட்டியிலும் பொதுப் பாதையிலும் உடலுறவு கொண்டதற்காக இந்த ஜோடி ஏற்கனவே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர்.
இதேபோல், மற்றொரு அரை நிர்வாண ஜோடி பிரேசில் கடற்கரையில் ஒரு பெஞ்சில் உடலுறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தப் பெண் காதலனுக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்து வாய்வழி உடலுறவு கொண்டிருந்தார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில். இந்த மாதிரி ஜோடிகளில் இந்த செயல் பார்ப்பவர்களுக்கு அருவறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், அவர்கள் இதுபோன்று செய்வதை நிறுத்தவில்லை என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
பிரேசிலிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 233 இன் படி, இந்த சம்பவம் ஒரு ஆபாசமான செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)