Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம் என்பதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம் என்பதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
— Shanmugam P (@Shanmugamcpim) July 28, 2026
தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில்… pic.twitter.com/O1wHGMiQzB
தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.
Before You Go
"ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் மகன்களைப் பார்க்கலாம்" ரவி மோகனுக்கு நீதிமன்றம் ORDER?
ட்ரெண்டிங் செய்திகள்























