மேலும் அறிய

திரும்ப பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் - திருவாரூரில் பேரணி நடத்தி வெற்றியை கொண்டாடிய விவசாயிகள்

’’விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு எம்.எஸ்.சாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் வரை யுத்தம் தொடரும்’’

வேளாண் சட்டங்களை கைவிட வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய அரசு வேளாண் சட்டங்களை சட்டபூர்வமாக வாபஸ் பெற்றது. வேளாண் சட்டம் வாபஸ் பெறப்படும் என பிரதமர் தெரிவித்த பின்னரும் சட்டப்படி வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து சட்ட நடவடிக்கைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த போராட்டத்தின்போது 714 பேர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திருவாரூரில் ஜக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பேரணியை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் சேரன் தொடங்கி வைத்தார். பேரணியில் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

திரும்ப பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் - திருவாரூரில் பேரணி நடத்தி வெற்றியை கொண்டாடிய விவசாயிகள்
 
இந்த பேரணி திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் விஜயபுரம் சாலை நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்று தெற்கு வீதி பொதுக்கூட்ட மேடையை அடைந்து நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் மாசிலாமணி வரவேற்றார். அகில இந்திய பொதுச் செயலாளர் அதுல்குமார் அஞ்சன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஜக்கிய விவசாயிகள் முன்னணி ஐவர் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான அசோக் தாவ்லே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது... டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலான தொடர் போராட்டத்தினால் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது. போர் முடிந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் யுத்தம் முடியவில்லை. விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு எம்.எஸ்.சாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் வரை யுத்தம் தொடரும். விவசாய தொழிலாளர்களின் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்கபட்டு, சம்பளத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
 

திரும்ப பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் - திருவாரூரில் பேரணி நடத்தி வெற்றியை கொண்டாடிய விவசாயிகள்
 
இந்தியாவின் மத ஒற்றுமை பாதுகாக்க பட வேண்டும் போன்ற கடமைகளை நிறைவேற்றிட ஒன்றினைந்து போராடும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் திருவாரூரில் போலீசார் தடையினை மீறி டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட ஒரு மாதம் சிறை சென்ற அமைப்பின் பொருளாளரும் தம்புசாமி உள்ளிட்டவர்களை பாராட்டி நினைவு பரிசினை வழங்கப்பட்டது. இதில் ஜக்கிய விவசாயிகள் முன்னணி கவுர தலைவர் தியாகபாரி, நிர்வாகிகள் உலகநாதன், கலியபெருமாள், சண்முகசுந்தரம், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget