மேலும் அறிய

‘பஸ் ஸ்டாண்ட் உள்ள வந்தாலே ஒரே நாத்தம் சார்’ முகம்சுழிக்க வைக்கும் விழுப்புரம் - இதெல்லாம் எப்போதான் சரியாகும் ?

புதிய கழிவறை திறக்கப்படாமல் உள்ளதால் பேருந்து பயணிகள் பேருந்து நிலைய முகப்பு வாயிலில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்.

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிவறை திறக்கப்படாமல் உள்ளதால் பேருந்து பயணிகள், பேருந்து நிலைய முகப்பு வாயிலில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுவதால் கழிவறையை திறக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்

தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக உள்ளது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம். தென்மாவட்ட மக்களை ஒன்றிணைக்கும் இந்த பேருந்து நிலையத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி ,சென்னை, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து மூலமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

மக்கள் அதிகமானோர் நீண்ட துரத்தில் இருந்து பேருந்து மூலமாக பயணம் மேற்கொண்டு விழுப்புரம் பேருந்து நிலையம் வந்தவுடன் சிறுநீர் கழிப்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கினால் கழிவறை வசதி இல்லாததால் பெரும்பாலான ஆண்கள் திறந்த வெளியிலையே பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கு அருகாமையிலையே சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வாயிலில் பேருந்துகள் நுழைந்தவுடன் நிறுத்தப்படும் இடம் துர்நாற்றம் வீசுவதால் பேருந்து பயணிகள் முகத்தை மூடியவாறும், ஆண்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் முகம் சுழித்தவாறு செல்கின்றனர்.

ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிவறை

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிவறையை திறக்கப்படாமல் உள்ளதால் கழிவறை உள்ள வாயில் பகுதியிலையே பயணிகள் சிறுநீர் கழித்துவிட்டும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு செல்கின்றனர். புதிய கழிவறை கட்டப்பட்ட முகப்பு வாயிலில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசும் அவலநிலை உள்ளது. எனவே புதிய கழிவறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. புதிய கழிவறை திறக்கப்படாமல் உள்ளது குறித்து நகராட்சி ஆணையர் ரமேஷிடம் கேட்டபோது, நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் டெண்டர் விடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் விரைந்து டெண்டர் விடப்பட்டு கழிவறை திறக்கப்படுமென ஆணையர் தெரிவித்துள்ளார். 

Villupuram: முகம் சுளிக்க வைக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

தேங்கி நிற்கும் கழிவு நீர்

மேலும், இப்பேருந்து நிலையத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்து கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதால் பேருந்து நிலையத்திற்கு வருவோர் மூக்கை பிடித்தவாறே கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்குள்ள கடைகள் அனைத்து பயணிகள் நடந்து செல்லும் பாதசாலை, பயணிகள் காத்திருக்கும் இடம் என அனைத்தும் ஆக்கிரமித்து தேநீர் கடைகள், பழ கடைகள் என பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் அங்கு உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயங்கும் அலுவலகம் எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாத அளவிற்கு குப்பைகள், தேவையற்ற பொருட்களை சேமிக்கும் இடமாக மாற்றியுள்ளனர் கடைக்காரர்கள்.

உயிர்பலி வாங்கிய வாகனங்கள் 

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையால் பறிமுதல் செயல்படும் விபத்துக்குள்ளான பேருந்துகள், கார்கள் ஆகியவைகளை பேருந்து நிலைய வாயிலில் நிற்க வைத்துள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த அச்சமடைகின்றனர். உயிர்களை பலி வாங்கிய வாகனங்களை பார்க்கும் போது அச்சமாக உள்ளதாகவும், பொது இடத்தில் அவற்றை நிறுத்தி வைத்திருப்பது தவறான செயலாகவும்,  மணல் லாரிகள், டாடா ஏசி,  சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம். நாள் தோறும் இரவு, பகலாக ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த மிகப்பெரிய பேருந்து நிலையம் மக்களுக்கானதாக இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget