மேலும் அறிய

புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு!

அரசு,மக்களின் கூட்டு அலட்சியத்தால் புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

அரசு, மக்களின் கூட்டு அலட்சியத்தால் புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுத்து, செயற்கை மணற்பரப்பை உருவாக்க மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, 25 கோடி ரூபாயில், நவீன தொழில் நுட்பத்தில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.

‛ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற வேண்டும்....’ - அமைச்சர் பொன்முடி கடிதம்!

 

புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு!

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் சேர்ந்துள்ள மணலை அள்ளித் தூர்வாருவதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் புதுச்சேரி துறைமுகம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ரூ.14.89 கோடி செலவில் நடந்தது. தற்போது புதிய கடற்கரை மணல் பரப்பு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உருவாகியுள்ளது. மணல் பரப்பு எங்கும் இன்று சென்று பார்த்தால் வெறும் குப்பைகளே காட்சி தருகின்றன.

 மேலும் படிக்க: GST on Education | கல்விச் சான்றிதழ்கள் மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பதா? தமிழக அரசுக்கு ஒபிஎஸ் கண்டனம்..


புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு!

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் விசாரித்த போது, புதுச்சேரியெங்கும் ஏராளமான கழிவுநீர் வாய்க்கால்கள் நேரடியாகக் கடலுக்குதான் வருகின்றன. அவை பராமரிக்கப்படுவதில்லை. முக்கியமாக கழிவுநீர் சுத்திகரித்து கடலில் விடப்படுவதில்லை. பல இடங்களில் குப்பைகளால் அவை அடைபட்டுக் கிடந்தன. பொது மக்களும் தங்கள் பங்குக்கு பல வாய்க்கால்களை குப்பைத் தொட்டிகளாக்கினர். தற்போது பெய்த கனமழையால் நகரெங்கும் வெள்ளக்காடானது. அந்த மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் கடலில் சேர்ந்தன. கடல் எப்போதும் தேவையற்ற குப்பைகளைக் கரைக்குத் தள்ளிவிடும். அதனால் தற்போது கரைக்குத் தள்ளப்பட்ட குப்பைகள் அனைத்தும் தற்போது மணல் பரப்பெங்கும் சிதறிக் கிடக்கின்றன.


புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு!

மேலும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

முக்கியமாக கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கடலில் அப்படியே அரசு விட்டு வருகிறது. அது அப்படியே கடலில் கலப்பதும், கடல் மாசு ஏற்படுத்தும் பணியை அரசும், மக்களும் கூட்டாகச் செய்து வருகின்றனர். இதனால் மனிதர்களுக்கு மட்டுமில்லால் கடல் உயிரினங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர். தற்போது புதிய கடற்பரப்பைக் காணவந்த பல சுற்றுலாப் பயணிகளும் பரவிக் கிடந்த குப்பைகளைப் பார்த்து முகம் சுளித்தனர்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget