மேலும் அறிய

விழுப்புரத்தில் SIR விண்ணப்பங்கள் விநியோகம்! உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் விரைவில் முடிக்கப்படும்!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் 87 சதவீத விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாற்பதாயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 33 ஆயிரம் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தீவிர திருத்தம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி விழுப்புரம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது.

87 சதவீதம் அளவிற்கு விண்ணப்பம் விநியோகம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்., விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 17.27 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுக்கு 87 சதவீதம் அளவிற்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்கது. மீதமுள்ள 13 சதவீதம் வீட்டில் ஆட்கள் இல்லாத சூழல் உள்ளிட்ட நிலையில் அலுவலர்கள் வீட்டிற்கு மூன்று முறை செல்வார்கள். 

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் என 1970 அலுவலர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட அலுலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

2002-2025 இந்த இரண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயர் உள்ளவர்கள் யார் என்று அறிந்து அந்த வாக்காளர்களுக்கு பதிவு செய்ய வாக்குச்சாடி அலுவலர்கள் உதவி செய்த வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கடந்த இரண்டு நாட்ககாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்பபெரும் பணி நடைபெற்ற வருகிறது.

தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40ஆயிரம் படிவங்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றின் 33 ஆயிரம் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள்ன்50 படிவங்களை பெற்று வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்று படிவங்களை பெற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளும் வகையில் சமூக வலைதளம் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 2002 வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது தாய், தந்தையின் பெயர், பாகம் எண் போன்ற விவரங்களை இணையதளத்தில் எளிமையாக பார்ப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் வாக்காளர் சேவை மையத்தின் இலவச எண் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் விரைவில் முடிக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்  அவர்கள் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Embed widget