ராமதாஸை சீண்டிய அமைச்சர் பன்னீர்செல்வம்... என்ன சொன்னார் தெரியுமா ?
கொரோனா காலங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து உதவி செய்யாத பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் எப்படி 50 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.

கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய மண்டல தேர்தல் பொறுப்பாளராக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளையும், 8 மண்டலமாக, தி.மு.க., பிரித்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு அமைச்சரை பொறுப்பாளராக நியமித்துள்ளது. அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆ.ராஜா, கனிமொழி ஆகிய ஏழு பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
வன்னியர்கள் அதிகம் உள்ள வட மாவட்டங்களில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 3 மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய, 8வது மண்டல பொறுப்பாளராக, அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















