தீபாவளி கொண்டாட்டம் களைகட்ட ஒரு சூப்பர் அறிவிப்பு! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களுக்காக தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி மறுநாளும் அரசு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்தார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில், வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், ஐடி நிறுவனங்களில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவதால், மொத்தமாக 3 நாள் விடுமுறை பெறுகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் தீபாவளி மறுநாளான செவ்வாய்க் கிழமையும் அரசு விடுமுறைஅறிவித்து, மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு செவ்வாய்க் கிழமையிலும் அரசு விடுமுறைஅறிவித்திருப்பது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் தீபாவளி மறுநாளில் அரசு விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது
தீபாவளி கொண்டாட்டம்:
தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டம் தற்போது முதல் களைகட்டத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு உள்ளிட்ட பலவற்றை அதிக சத்தம், அதிக மருந்துகள் கொண்ட பட்டாசுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால், பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் எதிரொலியாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
விதிகளை மீறினால்?
இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, அபராதம், கைது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் மக்கள்தொகை அதிகம் என்பதால் அங்கு ஒலி மாசும், காற்று மாசும் தீபாவளி காரணமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் இதனால் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாகவே தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்தாலும், பட்டாசுகள் விற்பனை படுஜோராகவே நடந்து வருகிறது. பட்டாசு விற்பனை செய்ய தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பட்டாசு கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பட்டாசு விற்பனை சில இடங்களில் தேங்கியுள்ளது. சிவகாசியில் இருந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் பட்டாசுகள் தீவிரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





















