மேலும் அறிய

‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

வேலூர் சிறையில் ஆய்வு செய்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் நீண்ட விடுப்பு வழங்குமாறு ராஜூவ் கொலை கைதிகள் முருகன் மற்றும் நளினி ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

"சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி .

வேலூர் மாநகராட்சி தொரப்பாடியில் அமைந்துள்ள வேலூர் மத்திய சிறையில் இன்று சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

முதலில் ஆண்கள் சிறைக்கு சென்று அங்குள்ள அடிப்படை வசதிகள், சிறைத்துறை மருத்துவமனை, கைதிகள் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிறையில் கைதிகள் நடைமுறைகள், அங்கு சிறைவாசிகள் மூலம் நடைபெற்றுவரும் விவசாயம், காலணி உற்பத்தி  தொழில் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார். 

இதைத் தொடர்ந்து பெண்கள் தனிச் சிறைக்கு சென்ற அமைச்சர் ரகுபதி, பெண் குற்றவாளிகளிடம்  உணவு முறைகள் முறையாக உள்ளதா என்று கேட்டறிந்து சமையல் கூடங்களையும் ஆய்வு செய்தார்.


‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி , ‛‛வேலூர் ஆண்கள் சிறையில் தற்பொழுது 742 பேரும் பெண்கள் சிறையில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில்  உள்ள மருத்துவமனை , சமையல் கூடம், கைதிகள் தங்கும் இடம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது,’’ என்று தெரிவித்தார் . மேலும் அவர் கூறுகையில், 

‛‛ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும்  முருகன் ,  நளினி ஆகிய இருவரையும் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை  கேட்டறிந்தோம்.
 


‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

கோரிக்கை மனுவில் முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் . அவர்களிடம் உங்களது  குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் வரை விடுப்பு வழங்க வாய்ப்புள்ளது என்றும் , அதனை மேலும் சில நாட்கள் நீட்டிக்கவும் முடியும். ஆனால் நீண்ட நாட்கள் விடுப்பு என்பது அரசால் நேரடியாக வழங்க முடியாது என்றும் . நீண்ட நாட்கள் விடுப்பு குறித்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொண்டால் அதனை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறிய அமைச்சர் ரகுபதி , ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் உள்ள பிற கைதிகளின் கோரிக்கைகளையும் மனுவாக பெறப்பட்டுள்ளதாக,’’ குறிப்பிட்டார்.

வேலூர் சிறையில்  ஷூ தயாரிப்பு நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். இந்தத் தொழிற்கூடங்கள் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார் .


‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

வேலூரில் சிறைக் கைதிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் உள்ள மேலும் 6 இடங்களில் விரைவில்  திறக்கப்படும். ஜெயில் கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். கிளை சிறைகளில் பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர் நீதிமன்றம் பரிந்துரையின் பேரில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார் .

சிறைத்துறை அமைச்சரின் ஆய்வின் பொழுது,  தமிழ்நாடு  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , எம்.எல் ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் விஷ்ணு பிரியா, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி , சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget