மேலும் அறிய

பொன்னியம்மன் கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக 6 தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது .

ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளும்படி , மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்தது.

திருவலம் அருகே கோவில் சிலைகளை சேதம் செய்ததாக, பிரபல தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து , 6 நபர்கள் கைது செய்துள்ளது காவல்துறை.

வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த கரிகிரி அருகே தீர்த்தகிரி மலை உள்ளது . இந்த மலையில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தீர்த்தவாரி பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது.


பொன்னியம்மன் கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக 6 தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது .

அதேபோல் இந்த கோவில் அடிவாரத்தில் உலகே புகழ்பெற்ற தோல் மற்றும் தொழு நோயாளிகளுக்கான தனியார் மருத்துவமனை ( கரிகிரி மருத்துவமனை ) லட்சமிபுரம் கிராமத்தில் கடந்த 66  ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரசித்திபெற்ற தீர்த்தவாரி பொன்னியம்மன் கோவிலின்  பூஜை பொருட்கள் மற்றும் சிலைகளை பராமரிக்க , மலை அடிவாரத்தில் கரிகிரி மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில், 8  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய கோவிலை கட்டி அங்கு தீர்த்தவாரி பொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான , ராமர் , சீதை , லட்சுமணர் ,  கருடன் உள்ளிட்டோரின் சிமெண்டால்  செய்யப்பட்ட சாமி சிலைகளை வைத்து பாதுகாத்து வருகின்றனர் . பொன்னியம்மன் கோவில் முக்கிய திருவிழா நேரங்களில் மட்டும்   சிலைகளை வெளியில் எடுத்து மலை அடிவாரத்தில் பொங்கல் வைத்து வழிபாட்டு , பின்னர் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சொந்தமான இடத்திலே பூட்டி வைத்து பராமரித்து வருகின்றனர்  .


பொன்னியம்மன் கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக 6 தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது .

மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள அந்த சிறிய கோவிலை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளும்படி , மருத்துவமனை நிர்வாகம் கடந்த 8 ஆண்டுகாலமாக கோவில் நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத கோவில் நிர்வாகத்தினர், தொடர்ந்து அராஜக போக்கை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகின்றது .


பொன்னியம்மன் கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக 6 தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது .

இதனிடையே , நேற்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் , தனது மருத்துவமனை ஊழியர்களை கொண்டு , ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவிலின் சாமி சிலைகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையின் கட்டிடப்பிரிவின் நிர்வாக இயக்குனர் பிரின்ஸ் சாலமன் (50) தலைமையில் மேலும் 7 மருத்துவமனை ஊழியர்கள் , சிலைகளை அப்புறப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர் .


பொன்னியம்மன் கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக 6 தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது .

அவர்கள் அப்புறப்படுத்தும்பொழுது ஒரு சுவாமி சிலையின் கை சேதப்படுத்தப்பட்டதாக கூறி , லட்சமிபுரம் கிராம மக்கள் , மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் , கோவில் நிர்வாகியான , லட்சுமிபுரம் , பஜனை கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 60 ) என்பவர் திருவலம் காவல் நிலையத்தில் , கோவில் சிலைகளை ஒரு கும்பல் சேதப்படுத்தியுள்ளதாக புகார் அளித்தார்.


பொன்னியம்மன் கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக 6 தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது .

புகாரின் அடிப்படையில் திருவலம் காவல் ஆய்வாளர் ஆனந்தன்  மற்றும் , உதவி ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீசார் , தனியார் மருத்துவமனை ஊழியர்களான , பிரின்ஸ் சாலமன் , கோவிந்தராஜ் (51 ) , பிரகாஷ் (47 ) , மோகன் (40 ) விக்ரமாதித்யன் (38 ) மற்றும் மோகன்ராஜ் (28 ) ஆகிய  ஆறு பேரையும் கைது செய்து , தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களையும் காட்பாடி சப் - கோர்ட்டில் ஆஜர்படுத்தி , குடியாத்தம் கிளை சிறையில் நேற்று இரவு அடைத்தனர் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget