மேலும் அறிய

TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்

TNPSC GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.01.2025 அன்று முதல் திங்கள் முதல் வெள்ளி) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள TNPSC GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.01.2025 அன்று முதல் திங்கள் முதல் வெள்ளி) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் 07.01.2025க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பபட்டுள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தெரிவித்துள்ளார்.

குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு பணி நிலைகளில் உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகின்றன. இதில் பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வுக்குத்தான் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள். விஏஓ, இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் என்றாலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள். நடப்பு ஆண்டில் சுமார் 8 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள்.

கடந்த ஆண்டுக்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் போன்ற அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை அடுத்த ஆண்டும் நடைபெற இருக்கும் தேர்வு விவரங்களை முன் கூட்டியே வெளியிட்டு வருகிறது. ஆண்டு கால அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஜூலை மாதம் நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள்.

தேர்வர்கள் பலரும் கோச்சிங்க் சென்டர்களிலும் சென்று படித்து வரும் நிலையில், ஏழை எளிய தேர்வர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பிலும் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். மாவட்ட வாரியாக மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தின் மூலமாகவும் சில நேரங்களில் நடத்தப்படுகிறது. இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி  தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget