மேலும் அறிய

Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

Yemen Nimisha Priya: கேரள செவிலியர் நிமிசா பிரியாவுக்கு ஏமன் நாட்டில், கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

நிமிசா பிரியாவை காப்பாற்றுமாறு #SaveNimishapriya என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர், ஏமனில் ஒருவரை கொலை செய்தாரா, எதற்காக அவரைக் காப்பாற்ற வேண்டும் என இந்தியர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர், இந்திய அரசுக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன என்று பார்ப்போம். 

ஏமன் நாடு:

ஏமன் நாடானது வடக்கே சவுதி அரேபியா, வடகிழக்கில் ஓமன், மேற்கில் செங்கடல் மற்றும் தெற்கே அரபிக் பெருங்கடலை எல்லைகளாக கொண்டுள்ளது. இங்குதான் நிமிசா பிரியா செவிலிரியாக பணி புரிந்திருக்கிறார். இங்கு, கிளர்ச்சிகளும், கலவரங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களை தாயகம் திரும்ப சொல்லிவிட்டது, இந்திய அரசு. இந்தியாவுக்கான தூதரகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

யார்,இந்த நிமிசா பிரியா.?

நிமிசா பிரியா, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் . இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருக்கிறார். இவரது பெற்றோர்கள் தினக்கூலி வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. செவிலியருக்கான படிப்பை முடித்த நிமிசா பிரியாவுக்கு, ஏமன் நாட்டு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து 2008 ஆம் ஆண்டு ஏமன் நாட்டுக்குச் சென்று பணி புரிகிறார். அவருடைய பணி நன்றாக போயிருக்கிறது. இவரது ஊதியத்தால், குடும்பமும் முன்னேற்றம் அடைந்து வந்திருக்கிறது.


Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

இதனை தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு கேரளா திரும்பிய நிமிசா பிரியாவுக்கு, அங்கு தாமஸ் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. பின்னர், கணவருடன் நிமிசா பிரியா ஏமன் நாட்டிற்குச் செவிலியராக பணிபுரிய திரும்பி விடுகிறார். அங்கு, அவரது கணவர் எலக்ட்ரீசியன் உதவியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.  அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. இதையடுத்து, தாமசுக்கு சரிவர வேலை இல்லாத காரணத்தால் சொந்த ஊரில் வேலை பார்க்கலாம் என தாமசும் , அவரது குழந்தையும் கேரளம் திரும்பி விட்டனர்.

ஏமனில் புதிய மருத்துவமனை:

இவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கையில், நிமிசாவுக்கு ஒரு யோசனை வருகிறது; அதுதான் , அவருக்கு சிக்கலாக மாறிவிட்டது. ஏமனில் ஒரு சிறிய மருத்துவமனை ஆரம்பிக்கலாம் என்றும்; இதையடுத்து தனது கணவரையும் குழந்தையையும் திரும்ப அழைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. 

ஆனால், ஏமன் சட்டப்படி அயல்நாட்டவர் சொந்தமாக மருத்துவமனை தொடங்க முடியாது, வேண்டுமென்றால் உள்நாட்டினவரின் முதலீட்டுடன் கொண்டு தொடங்கலாம். அப்போது, தற்போதைய வேலை பார்க்கும் மருத்துவமனையில் , பிரசவத்திகாக வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரது கணவர் தலால் அப்தோ மஹ்தி என்பவர், மருத்துவமனை ஆரம்பிக்க முதலீடு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். இருவரும் இணைந்து சிறிய மருத்துவமனையை ஆரம்பிக்கின்றனர்.

துன்புறுத்தலுக்கு ஆளான நிமிசா:

இதையடுத்து, 2015 ஆண்டு ஏமனில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுகிறது. அப்போது, இந்தியர்களை திரும்பிவர இந்திய அரசு உத்தரவிட பலர் திரும்பிவிட்டனர்.மேலும், இந்தியர் யாரும் ஏமனுக்கு போக கூடாது எனவும் உத்தரவும் பிறப்பித்தது. 
ஆனால், நிமிசா பிரியா இந்தியா திரும்பவில்லை; ஏனென்றால் மருத்துவமனை தொடங்க முதலீடு செய்தாகிவிட்டது என்பதால். ஆனால், நிமிசாவை ஏமாற்ற ஆரம்பித்திருக்கிறார் தலால் . ஒரு கட்டத்தில், நிமிசாவை தாக்குவதும், துப்பாக்கி கொண்டு மிரட்டவும் ஆரம்பித்திருக்கிறார். 

இதனால்,பொறுமையிழந்த நிமிசா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். மேலும்,  நிமிசா தனது மனைவி என்றும், போலியாக திருமண புகைப்படத்தை உருவாக்கி, இது எனது சொத்துதான் என காவல் நிலையத்தில் தலால் கூறியிருக்கிறார். இதனால் , நிமிசாவுக்கு 6 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 


Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

படம்: தலால் அப்தோ மஹ்தி

மரண தண்டனை:

அப்போது, நிமிசாவின் நிலைமை அறிந்த காவலர் ஒருவர், தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு தப்பித்து ஓடிவிடுமாறு கூற, அவரும் மயக்க மருந்து கொடுத்திருக்கிறார். ஆனால் , மயக்க மருந்து வீரியம் அதிகமாக , தலால் இறந்துவிடுகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த, அங்கிருந்த ஹுனான் என்கிற தோழியிடம் கூற, உடலை அகற்றிவிட்டு நாட்டை விட்டு தப்பித்து ஓடிவிடு என அறிவுரை கூற, இருவரும் அவரது உடலை ஒரு நீர்த்தேக்கத்தில் உடலை போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து, சவுதி வழியாக தப்பித்துச் செல்லும் போது, எல்லையில் கைது செய்யப்படுகிறார் நிமிசா. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது. அப்போது, நீதிபதிக்கும் நடந்தது என்ன நடந்தது தெரிகிறது, அதனால் ஏமனில் ஒரு சட்டம் இருக்கிறது; தியா என்கிற சட்டம் ; 

தியா சட்டப்படி, குற்றவாளி வேண்டும் என்றே குற்றம் செய்யவில்லை என்று  கருதினால், பிளட் மணி கொடுத்தால் தண்டனையில் இருந்து விடுபடலாம். பிளட் மணி ( Blood Money ) என்றால் பணம் கொடுத்தால் தண்டனையை திரும்ப பெற்று கொள்ளப்படும்; அதுவும் ,பாதிக்கப்பட்ட குடும்பத்தின் ஒப்புதலும் இருக்க வேண்டும். 

ஏமன் வந்த நிசாவின் தாய்

இதையடுத்து, இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பிக்க, கேரளாவில் பல தொண்டுக்கள் மூலம் பணம் திரட்டப்படுகிறது. இந்திய அரசின் நிபந்தனை அடிப்படையிலான ஒப்புதலுடன் நிமிசாவின் தாயார், ஏமன் செல்கிறார். அங்கு வழக்கறிஞர் ஒருவரை அணுகுகிறார். அப்போது, எனக்கு 40,000 டாலர்( ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 35 லட்சம் ) தர வேண்டும் என்றும் தண்டனையை திரும்ப பெற பிளட் மணியாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3.5 கோடி தரவேண்டும் என வழக்கறிஞர் கூறுகிறார்.  நிமிசா தாயாரும் பணம் தருவதற்காக ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அந்த வழக்கறிஞர் , கட்டணம் பெற்றுக்கொண்டு , அடுத்தகட்டமாக எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஏமான் அதிபருக்கான அதிகாரங்கள் ( Pardoning Power ) அடிப்படையில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், கடந்த வருடம் ( 2024 ) டிசம்பர் 30 ஆம் தேதி மரண தண்டனையை உறுதி செய்துள்ளார். இந்நிலையில், அவருகான மரண தண்டனையானது ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த ஜனவரி மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று.


இந்திய அரசு:

இந்நிலையில், “ பலரும் நிமிசாவை காப்பாற்றுமாறு அரசிடம் கோரிக்கை வைத்த வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது, “ இந்த விவகாரத்தை அறிந்திருப்பதாகவும், இதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் , இந்த விவகாரத்தில், வாய்ப்பிருக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் பிளட் மணி என கூறப்படும் தேவையான பணத்தை அளிக்க, நிமிசா தரப்பு தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு, ஏமனில் தூதரகம் கிடையாது, அண்டை நாடான சவுதியில் இருந்துதான், இந்த விவகாரத்தை கையாண்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 


Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

”நிமிசாவை காப்பாற்றுங்கள் “

மேலும், ஏமனில் கிளர்ச்சி உள்ளிட்டவைகள் ஏற்படுவதால், அரசின் நிலையற்றத்தன்மையும் இருக்கிறது. 
இந்த தருணத்தில், ” நிமிசா குற்றம் செய்திருந்தாலும் வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்றும் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தது, மரணத்தில் சென்றுவிட்டது என்றும்,  நிமிசாவை காப்பாற்ற வேண்டும் என்று இந்தியர்கள் பலரும் கோரிக்கைகள் வைத்து வருகின்றன.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
Embed widget