மேலும் அறிய

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு; எச்சரிக்கை விடுத்த கிராம மக்கள்

மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கும் பட்சத்தில் வழக்கம்போல் எருது விடும் திருவிழா நடைபெறும் என கிராம மக்கள் எச்சரிக்கை.

வாணியம்பாடி அருகே வழக்கம் போல் நடைபெறும் எருது விடும் திருவிழாவிற்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும்  வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், எருது விடும் திருவிழா நடைபெறுமா என கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறைகளாக காணும் பொங்கல் மறுநாள் தை 4 ஆம் நாளில் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு எருது விடும் விழாவிற்காக  அரசு விதிமுறைப்படி விழா குழுவினர் கடந்த மாதம் 16 ந்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எருது விடும் விழாவிற்காக அனுமதி வழங்க மனு அளித்தும் அதன் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு; எச்சரிக்கை விடுத்த கிராம மக்கள்
 
மேலும் எருது விடும் விழா நெருங்கி வரும் நிலையில் திடீரென மாவட்ட நிர்வாகம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும், காப்பீடு  கட்ட வேண்டும், தேசிய விலங்குகள் நல வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், அதற்குண்டான ஆவணங்களையும் சரியாக வைத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தும்,(வெப்சைட்) ஏற்கவில்லை என  குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் வழக்கம் போல் காணும் பொங்கல் மறுநாள் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெறும் என்றனர்.
 
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிபவர்கள் கூடுதலாக விடுமுறை எடுத்து விட்டு  சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காதது கிராம மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து சில காளைகள் ஏற்கனவே வந்துவிட்டதாக  கூறப்படுகிறது.
 
விழா குழுவினர் எருது விடும் விழாவிற்கான தடுப்பு  அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு; எச்சரிக்கை விடுத்த கிராம மக்கள்
 
மேலும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கும் பட்சத்தில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று எருது விடும் திருவிழா நடைபெறும் எனவும் விழா குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget