மேலும் அறிய

திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

’’திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை'’

திருவாரூரில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தனியார் அரவை மில் லாரிகளில் இயக்கம் செய்வதை கண்டித்து திருவாரூர் தாலுக்கா  லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 500க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் தாலுகாவில் மட்டும் தற்சமயம் 37 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கும் , அரவைக்காக மில்களுக்கு நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதற்கும் திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் செயல்பட்டுவரும் அரவை மில் நெல் மூட்டைகளை அரவை செய்வதற்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் பெற்று, தனது பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை கங்களாஞ்சேரி எட்டியலூர் மருதவஞ்சேரி பகுதிகளில் செயல்படும் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் மூட்டைகளை இயக்கம் செய்து வருகிறது.


திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் வி.கே.எஸ் கண்ணன் தலைமையில் முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் போராட்டக்குழு சார்பில் மண்டல மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அதன் தலைவர் கண்ணன் கூறியதாவது:


திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருவாரூர் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகின்றன. இதனை நம்பி 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் செய்துகொண்டு நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணியை செய்து வரும் நிலையில், தனியார் மில் உரிமையாளர்கள் தங்களது மில்லுக்கு ஒப்பந்தம் பெற்றதன் அடிப்படையில் தங்களது லாரிகளை கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் மூட்டைகளை ஏற்றி வருகின்றனர்.

இதற்கென தனியாக வாடகை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் இதனால் திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. பலமுறை மண்டல மேலாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தலைப்பு செய்திகள்

சிவகங்கை பிரான்மலையில் பட்டப்பகல் கொள்ளை: 60 கிராம் தங்கம், பணம் மாயம்!
சிவகங்கை பிரான்மலையில் பட்டப்பகல் கொள்ளை: 60 கிராம் தங்கம், பணம் மாயம்!
" அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் உடனே வேலை காலி " - பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம்
உங்கள் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பரிசு! சமூக நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
உங்கள் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பரிசு! சமூக நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
உசிலம்பட்டி நகராட்சி: சாக்கடையை தூர்வாரிய நகர் மன்ற உறுப்பினர்கள்; பெரும் பரபரப்பு!
உசிலம்பட்டி நகராட்சி: சாக்கடையை தூர்வாரிய நகர் மன்ற உறுப்பினர்கள்; பெரும் பரபரப்பு!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget