மேலும் அறிய

Crime : தனியார் நிறுவனத்தில் முதலீடு: நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என விரக்தி.. பெண் தற்கொலை

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண் இறந்தார். தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் பணம் வழங்காததால் விபரீத முடிவு எடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த ரமேசின் மனைவி தீப லட்சுமி (வயது 35). இவர் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதில் அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக வந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி மாலை தீப லட்சுமி விஷம் குடித்து மயங்கினார். வளாகத்தில் மயங்கி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் தீபலட்சுமி நேற்று பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண் இறந்தது தொடர்பாக திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்தது.. தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் தீப லட்சுமி ஏராளமான வாடிக்கையாளர்களை சேர்த்து விட்டுள்ளார். இதில் வாடிக்கையாளர்களுக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் பணம் முதலீடு செய்தவர்கள், தீபலட்சுமியிடம் தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர் தனியார் நிறுவனத்திடம் கமிஷன் தொகையை கேட்டிருக்கிறார். ஆனால் அவா்கள் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
Crime : தனியார் நிறுவனத்தில் முதலீடு: நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என விரக்தி.. பெண் தற்கொலை

மேலும் இதனால் மன அழுத்ததிற்கு ஆளான தீப லட்சுமி என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடி நின்றார். தொடர்ந்து தனியார் நிறுவனத்திடம் சென்று என்னை நம்பி பணம் முதலீடு செய்தவர்களுக்கு இன்னும் சரியான கமிஷன் தொகை வழங்கபடவில்லை, ஆகையால் அந்த தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனம் சரியான பதில் சொல்லாமலும், பணத்தை தராமலும் இழுக்கடித்தது எனவும் விசாரனையில் தகவல் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தீப லட்சுமியிடம் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து கமிஷன் தொகை, அல்லது நாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பி வழங்குமாறு தொடர்ந்து தொலைபேசி மூலமாகவும், நேரிலும் வந்து கேட்டுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும் இதற்கிடையில் தனியார் நிறுவனத்தில் இருந்து உரிய கமிஷன் தொகையை தீபலட்சுமி மட்டும் பெற்றுவந்த நிலையில் தான் சேர்த்து விட்டவர்களுக்கு கமிஷன் தொகையை வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


Crime : தனியார் நிறுவனத்தில் முதலீடு: நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என விரக்தி.. பெண் தற்கொலை

இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என காவல்துறையினர் தரப்பில் தகவல்  கூறினர்.

தனியார் நிறுவனத்தில் முதலீடு திட்டத்தில் பணம் வழங்காத நிலையில் விபரீதமாக முடிவு எடுத்து விஷம் குடித்து பெண் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் தேவையில்லாமல் சில நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். பின்பு ஏமாற்றம் அடைந்துவிடுகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget