மேலும் அறிய

கணவரை கொன்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே பெருங்களூர் பக்கம் போரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நந்தினி (24) என்பவருக்கும் திருமணமானது. நந்தினி திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரியவந்ததால் நந்தினிக்கு அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின்பும் நந்தினி, அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கணவர் பாண்டித்துரை, நந்தினியை கண்டித்தார். தனது கள்ளத்தொடர்பு விவகாரத்திற்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வீட்டில் வைத்து நந்தினி அரிவாளின் மற்றொரு பகுதியால் பாண்டித்துரையின் தலையின் பின்பக்கம் ஓங்கி அடித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் பாண்டித்துரையின் உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசி மறைத்தார்.


கணவரை கொன்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

இந்த நிலையில் கொலை செய்து விட்டு தனது கணவரை காணவில்லை என நந்தினி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், நந்தினி தனது கணவரை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. மேலும் கிணற்றில் இருந்து பாண்டித்துரையின் உடலை மீட்டு கொலை வழக்காக பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார்.


கணவரை கொன்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

இதில் கணவரை கொலை செய்த நந்தினிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும், தடயங்களை மறைத்ததற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி நந்தினி ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட அவரை திருச்சி மகளிர் சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். மேலும் இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு பாக்கியலட்சுமி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget