மேலும் அறிய

”நாம் அடிமையான இனம், தாய் நாட்டில் தமிழ் மொழியை படிக்க முடியாது” - சீமான் பேச்சு

தமிழ் மொழியின் வீழ்ச்சி, தமிழர் வீழ்ச்சி இரண்டு மொழியில் கையெழுத்து போடும் ஈன இனம், நமது இனம் மட்டும் தான் - சீமான் பேச்சு

தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் 75வது பிறந்தநாள் விழா திருவெறும்பூர் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில்  பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மேலும் இந்த மண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மணியரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்  பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது, “பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது விருப்பமில்லை. ஆனால் நாம் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். அப்படி கொண்டாடுவதால் நம் உணர்வுகள் இருமடங்காக ஆகிறது. மக்களுக்காக போராடுபவன் தலைவன் ஆகிறான். மக்களை போராட வைப்பவன் புரட்சியாளன் ஆகிறான். வரலாறு எந்த தலைவருக்காகவும் காத்திருப்பதில்லை. இருப்பவன் ஒருவனை தேர்வு செய்து செல்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கவலை அடைந்த நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக விளையாட்டு மைதானத்தில் 2.50 லட்சம் குடி தண்ணீரை வீணாக்கினார்கள். இதைக் கேட்ட என்னை சிறையில் அடைத்தனர்.  என் மீது 176 வழக்குகள் உள்ளது. சிறைச்சாலை நமக்காக தான், நாம் சிறை பறவைகள்,  சீமானை யாரும் ஜெயிலுக்கு அனுப்ப முடியாது , போனால் எல்லோரும் போவோம்.


”நாம் அடிமையான இனம், தாய் நாட்டில் தமிழ் மொழியை படிக்க முடியாது” - சீமான் பேச்சு

தமிழனாக பிறந்தால் மட்டும் தமிழன் இல்லை. யார் இறுதிவரை உறுதியாக உழைக்கிறானோ அவன் தான் தமிழன். ஜாதி, மதம் அடிப்படும் போது தமிழனாக இல்லாமல், இனத்திற்கு அடிவிழும் பொழுது கொதித்து எழுபவன் தான் தமிழன். ஒருவன் உயிரை இழப்பதை காட்டிலும் உரிமையை இழப்பது தேசிய மற்றும் நாட்டின் பெரிய இழப்பு ஆகும். தமிழ்நாடு அரசு அலுவலக கட்டிடங்களில் தமிழில் பெயர்  பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அங்குள்ள கோப்புகளில் தமிழில் இருக்காது. மோடி தமிழ் மொழி சிறந்தது என்பார், ஆனால் பாராளுமன்ற கட்டிடத்தில் ஆங்கிலம்,  இந்தி, சமஸ்கிருதம் மொழிகளில் கல்வெட்டு இருக்கும், தமிழ் மொழியில் இருக்காது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமைச்சராகவே இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.  செப்டம்பர் மாதம் உரிமைத்தொகை தருவதற்கு இப்போது ஏன் விளம்பரம் அதற்கு எத்தனை கோடி செலவு. நாம் அடிமையான இனம், தாய் நாட்டில் தமிழ் மொழியை படிக்க முடியாது. மற்ற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு அந்த  மாநிலங்கள் 90 விழுக்காடு வைத்துக் கொள்கிறது.  மற்ற மாநிலங்களுக்கு பத்து விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்குகிறது. ஆனால் நாம்  தமிழகத்தில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்கிறோம். ஆனால் உயர் நீதிமன்றம் 20 விழுக்காடு தான் ஒதுக்குகிறது.


”நாம் அடிமையான இனம், தாய் நாட்டில் தமிழ் மொழியை படிக்க முடியாது” - சீமான் பேச்சு

நாள்தோறும் குடிப்பதற்காக செலவு செய்யும் நம் மக்களுக்கு எதற்கு இலவசம்,  தமிழ் மொழியின் வீழ்ச்சி, தமிழர் வீழ்ச்சி இரண்டு மொழியில் கையெழுத்து போடும் ஈன இனம் நமது இனம் மட்டும் தான். குறிப்பாக  சாலையின் ஓரத்தில் ரேஷன் கடை உள்ளது. அதன் அருகிலேயே மதுபான கடை உள்ளது. பக்கத்தில் வாங்கி கொடுப்பதற்கு எதற்கு இலவசம். வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள் தற்பொழுது தமிழர்களுக்கான வரலாறு எழுதும் நேரம் வந்துவிட்டது. பிரபாகரனுக்கு நிகழ்ந்தது நமக்கும் நிகழலாம். எதிரிகள் தூரத்தில் இருப்பார்கள், துரோகிகள் அருகே இருப்பார்கள்” எனக் கூறினார்.

இந்த விழாவில் தமிழ் தேசிய பேரியக்கம் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget