மேலும் அறிய

சிறுகனூர் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் விபத்துகளை தடுக்க தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் ஊராட்சி. இங்கு ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சிறுகனூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது சிறுகனூர் கிராமத்தில் தச்சங்குறிச்சி பிரிவு ரோடு முதல் லால்குடி செல்லும் சாலையில் மேம்பாலம் அமைத்து வருகின்றனர். சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி செல்வதற்கு தற்போது அமைத்து வரும் மேம்பாலம் சென்று மீண்டும் பள்ளி செல்ல சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், சிறுகனூர் கிராமத்திற்கு அருகில் கிழக்குப் பகுதி உள்ள கிராமங்களான ரெட்டிமாங்குடி, கொளக்குடி, பெருவளப்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் வங்கி ஊழியர்கள் மின்துறை ஊழியர்கள் விவசாய தொழிலாளர்கள் மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களான சி.ஆர். பாளையம், திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம் சனமங்கலம், பாலையூர் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல நீண்டநேரம் ஆவதால் சிலர் சாலையை கடக்க முயன்று விபத்தில் சிக்குகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் கிராமத்தில் பழைய பஸ் நிறுத்தத்தில் எந்த ஒரு வழித்தடம் கூட சாலையின் நடுவில் இதுவரை அமைக்கவில்லை என்றனர்.


சிறுகனூர்  தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, பொதுமக்களின் நலன் கருதி, அப்பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி கண்ணன் தலைமையில் பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இங்கு தரைப் பாலம் அமைத்தால் விபத்துகளினால் ஏற்படும் உயிர்சேதம் தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுகனூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகல் என 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையை கடப்பதில் சிரமம் உள்ளது. எனவே சிறுகனூர் பழைய பேருந்து நிறுத்தம் அருகே தரைப்பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றனர். மேலும் சிறுகனூர் மெயின் ரோட்டில் பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அமைத்து வரும் பாலம் அருகே இருந்து நடந்து வரும் பொழுது விரும்பத்தகாத சம்பவங்களும் தேவையற்ற அசம்பாவிதங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கிருந்து திருப்பட்டூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது.எனவே சிறுகனூர் பஸ் நிறுத்தம் அருகே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான் அதை செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


சிறுகனூர்  தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

மேலும் வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, சிறுகனூரில் எங்களது உறவினர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக அடிக்கடி சிறுகனூருக்கு வருவோம். மேலும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்வோம். தற்பொழுது 1½ கிலோ மீட்டர் தூரத்தில் பாலம் அமைத்து வருகிறார்கள். நாங்கள் பஸ்சை விட்டு இறங்கி 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து அதன்பிறகு திருப்பட்டூர் செல்ல சாலையை கடப்பதற்கு அச்சமாக உள்ளது. எனவே பழைய பஸ் நிறுத்தம் அருகே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும். மேலும் சிறுகனூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேர் பல்வேறு பணிகளுக்காக இங்கு வந்து செல்கின்றோம். 1½ கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதால் நேரம் வீணாகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் போய்விடுகிறது. மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே சிறுகனூர் பழைய பேருந்து  நிறுத்தம் அருகே தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என்றனர். மேலும் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Embed widget