மேலும் அறிய

திருச்சி சமயபுரம் கோயில் இணை ஆணையரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம், 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிந்ததால் பரபரப்பு.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக, தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவில் நிர்வாகம் சார்பில் 100 ரூபாய் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசன வரிசையில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமயபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கட்டணமின்றி கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமயபுரம் கடை வீதி, சன்னதி வீதி, வியாபாரிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், சமயபுரம் நால்ரோட்டில் இருந்து கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த அழைத்தனர்.


திருச்சி சமயபுரம் கோயில் இணை ஆணையரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

இதையடுத்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தின் மாடியில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியம், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி, போலீஸ் அதிகாரிகள் ஆகியோர், முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட அதிகாரிகள், இப்பிரச்சினை குறித்து கலெக்டருடன் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று கடைவீதி, சன்னதி வீதி ஆகியவற்றில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தால்  சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


திருச்சி சமயபுரம் கோயில் இணை ஆணையரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

இதுகுறித்து சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் : 

கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி, அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் சிலர் உள்ளூர் மக்கள் என்ற போர்வையில் கோவிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அதை தடுக்கும் வகையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வரும்போது தங்களுடைய ஆதார் அட்டை எடுத்து வந்தால், கிராம மக்கள் யார்? இடைத்தரகர்கள் யார்? என்று அடையாளம் தெரியும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இதுகுறித்து சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கலெக்டருடன் ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget