மேலும் அறிய

வாழ தகுதியான முக்கிய நகரம் எது? - கருத்து கணிப்பில் எந்த நகரம் முதலிடம் பிடிக்கும்..!

வாழ தகுதியான முக்கிய நகரம் எது?, தமிழகத்தில் திருச்சிக்கு 4வது இடம், மத்திய அரசின் கருத்துக்கணிப்பில் தகவல்

இந்தியாவில் வாழ்வாதார நிலைமைகளின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய நகரங்களின் வாழ தகுதியான ஊர் குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்பு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஈஸ் ஆப் லிவிங் இன்டெக்ஸ் 2022ன் ஒரு பகுதியாக, குடிமக்களிடையே குடிமக்கள் கருத்துக் கணக்கெடுப்பை (சிபிஎஸ்) திருச்சி மாநகராட்சி ஊக்குவிக்கத் துவங்கியுள்ளது. டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ள ஆன்லைன் கணக்கெடுப்பில் இதுவரை 3000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, வாழ்க்கைத் தரம், பொருளாதார திறன் மற்றும் நகரத்தின் நிலைத்தன்மை ஆகிய மூன்று முக்கிய தூண்களில் கவனம் செலுத்தும். கணக்கெடுப்பில் மொத்தம் 17 கேள்விகள் கேட்கப்படும். மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் நகரத்தைப் பற்றிய அவர்களின் பதில் 1 முதல் 5 வரை 1 கெட்டது மற்றும் 5 நல்லது என மதிப்பிடுமாறு கோரப்படும். முதல் கேள்விக்கும் மறு கேள்விக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கும் வகையில் கேட்கப்படும்.


வாழ தகுதியான முக்கிய நகரம் எது? - கருத்து கணிப்பில் எந்த நகரம் முதலிடம் பிடிக்கும்..!

மேலும் வாழ்க்கைத் தரம் பிரிவின் கீழ் சொந்த வீடு உள்ளதா, சாலை வசதி, குடிநீர் விநியோகம், கல்வி, பாதுகாப்பு, சுகாதார சேவைகள் மற்றும் தடையில்லா மின்சாரம் பற்றிய கேள்விகள், பொருளாதாரத் திறன் தூணில் வேலை வாய்ப்புகள், கட்டுப்படியாகும் விலை மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவை கேட்கப்படும். நிலைத்தன்மை தூணில், காற்று மாசு அளவு, தூய்மை மற்றும் பாதசாரிகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு குறித்த கேள்விகள் கேட்கப்படும். இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பை குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் திருச்சி மாநகராட்சி பகிர்ந்துள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்ய உள்ளூர் மக்களை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக குடியிருப்பாளர்கள் www.eol2022.org/CitizenFeedback என்ற இணையதளத்தில் கருத்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


வாழ தகுதியான முக்கிய நகரம் எது? - கருத்து கணிப்பில் எந்த நகரம் முதலிடம் பிடிக்கும்..!

இதில் பங்கேற்பதற்கு முன்பாக ஆன்லைனில் ஆதார் எண் உள்ளிட்ட பல்வேறு இணைப்புகளை அளித்தால் மட்டுமே கருத்துகளை பதிவிட முடியும். இந்த கருத்து கணிப்பில் பங்கேற்பாளர்களில் தமிழ்நாட்டில் திருப்பூர் பொதுமக்கள் 6 ஆயிரம் ஆன்லைனில் டவுன்லோடு முன்னிலையில் உள்ளனர். 2வது இடத்தில் கரூர், 3வது இடத்தில் சென்னை மற்றும் 4வது இடத்தில் திருச்சியில் 4 ஆயிரம் பேர் ஆன்லைனில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தின் இந்த கருத்து கணிப்பில் கடந்த 2018ம் ஆண்டு திருச்சி 12வது மற்றும் 2020ம் ஆண்டில் 10வது இடத்தை பிடித்தது. தொடர்ந்து 2021ம் ஆண்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்படாததை அடுத்து இந்தாண்டிற்கான கருத்துக்கணிப்பு துவங்கி வரும் 20ம் தேதியுடன் முடிவடைகிறது என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
Embed widget