மேலும் அறிய

திருச்சி: உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜபாளையம் யானை ரோகினி உயிரிழந்தது

திருச்சி அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜபாளையம் யானை இறந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் வசம் இருந்த யானைகள் மற்றும் சட்ட விரோதமாக வளர்த்து வந்த யானைகளை அரசு தனியாரிடம் இருந்து மீட்டு யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கும் பணியை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி எம்ஆர் பாளையத்தில் உள்ள வனப்பகுதியில் தமிழக வனத்துறை சார்பில் மீட்கப்பட்ட யானைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் மதுரையிலிருந்து வந்த மலாச்சி(38), காஞ்சி சங்கராச்சாரியார்  மடத்திலிருந்து இந்து (25), திருநெல்வேலியிலிருந்து  ஜமீலா(66), திருவிடைமருதூரிலிருந்து கோமதி(68) உள்ளிட்ட 6 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி டாப்சிலிப்பிலிருந்து ரோகினி(25), ராஜாபாளையத்திலிருந்து இந்திரா (60) ஆகிய 2 பெண் யானைகள்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஆர் பாளையம் முகாமிற்கு வந்தது. தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த மறுவாழ்வு மையத்தில் வன மருத்துவர் மூலம் யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.  மேலும்  உடல்நல பாதிப்பு ஏற்படும்போது முறையான சிகிச்சைகள் வழங்கப்படும்.

மேலும் யானைகள் புத்துணர்ச்சிக்கு தண்ணீர் தொட்டிகளின் மூலம் குளிக்க வைப்பதோடு, தினமும் 1.5 கி.மீ. முதல் 6 கி.மீ. வரை நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வந்த ரோகினி, இந்திரா யானைகள் சற்று உடல்நல குறைவு ஏற்பட்டு இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைபடி அவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தனித்தனி பாகன்கள் நியமிக்கப்பட்டு யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று யானைகள் மறுவாழ்வு மைய நிர்வாகம் தெரிவித்தது. 8 யானைகளும் முகாமில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

 


திருச்சி: உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜபாளையம் யானை ரோகினி உயிரிழந்தது

இந்நிலையில், யானை ரோகினி கடந்த 6 மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தது. உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த யானை சிகிச்சை பலன் இன்றி இறந்தது. கால்நடை மருத்துவ குழுவினர், வன அலுவலர்கள் முன்னிலையில் யானையை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மறுவாழ்வு மையத்திலேயே 12 அடி அகலம், 12 அடி நீளம், 12 அடி ஆழம் கொண்ட குழி வெட்டப்பட்டு உப்பு, சுண்ணாம்பு, மஞ்சள் பொடி, பூக்கள் யானையின் மீது தூவப்பட்டு கிரேன் மூலம் தூக்கி குழிக்குள் இறக்கி அடக்கம் செய்யப்பட்டது. இந்த மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு யானை இறந்ததால் தற்போது, 7 யானைகள் மட்டுமே உள்ளன. உயிரிழந்த யானை ரோகினிக்கு வயது 26. இந்த யானை கடந்த 6 மாதத்திற்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியாரால் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget